செவ்வாய், 17 ஜூன், 2014

அன்புள்ள கணவா !


                                                  அன்புள்ள  கணவா !

                          அன்புள்ள  கணவா!  ,உன் நெஞ்சில் நான்  நிறைந்திருந்தாலும்
                         என் பெண்ணுள்ளம்  எதிரொலியாய்  இருந்தாலும்
                          நான் என்றும், நீ என்றும் இருவராக  இருந்தாலும் ,
                         நான்  வேறு,  நீ வேறு யார் சொன்னாலும் 

                         உந்தன் மனதினிலே நான்  என்றும்  இருந்தாலும் ,
                         சுகமும், துன்பமும், சரிபாதியாய்  இருந்தாலும் ,
                         பூவாகி, காயாகி , கனியாய்  இருந்தாலும் ,
                         நீயாகி,  நானாகி, நாமாய்     இருந்தாலும்,

                         சுகம், சுகம் அது துன்பமான இன்பமாய் இருந்தாலும்,
                         மனம்,  பேதை மனம், மாறாத  சொந்தம் இருந்தாலும், 
                         இனமாகிய, பெண்,  உனக்கே உரிமையாய் இருந்தாலும்,
                         அது  பூப்போல  மென்மையாய் பூத்திருந்தாலும் ,

                        உந்தன்  நிழலாக  நான் மாறும் நாள்  வந்தாலும்,
                       தேன்   உண்ணும் வண்டாய்  நீ இருந்தாலும்,
                        தெம்மாங்கு  பாட நீ நினைத்திருந்தாலும்,
                        தொலைவில் இருந்தும்,  என் நெஞ்சத்தில் மறைந்திருந்தாலும்,

                       கல்யாணம் முடிந்து , காதல்  மறைந்தாலும்,
                       பழமையான காதல் நினைவுகள் மறக்காமல் இருந்தாலும்,
                       நமது  வாழ்கை எனும்  ஓடம்  ஓடிக்கொண்டிருந்தாலும்
                        பொங்கும் நமது உள்ளமே, வாழ்வின் புது வெள்ளமே!

                                         
                        


                          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக