புதன், 4 ஜூன், 2014


                                       நீ  இருந்தால்  என்னோடு

                நினைப்பது   நிறைவேறும்   நீ  இருந்தால்  என்னோடு,
                நடப்பது  நலமாகும் நான் இருந்தால்  உன்னோடு ,
                இருவரும்  சேர்ந்திருப்போமே  என்றும் அன்போடு,
                இன்றுபோல்  என்றும்  வாழ்ந்திடுவோம்   பண்போடு!

                ஒருவரின்  இதயத்தில்  ஒருவர்  குடியிருந்தால் 
                ஒருவரில் இருவரையும், ஓருடலாய் கண்டிடலாம் 
                கண்களின்  பார்வையாலே  உன்னை கண்டிடலாம் ,
                இருவிழி  நேசத்தாலே  உன்னை  அறிந்திடலாம் !

               தனிமை  உனக்கேது,  தாங்கும் இதயம்  எனக்கேது,
               தனிமையில்  என்றும்  நாம் இனிமை காண முடியாது,
               உலகத்தை மறந்து,  உறவு சொல்லி  விளையாடு,
               உள்ளத்தை  அறிந்து  எனக்காக  வாழ்ந்திடு!

               காதல்   கவிபாடு, காலமெல்லாம்   விளையாடு ,
               காதல் ஒன்றே  காதலர்களின்  வழிபாடு 
               மனதை  பறிகொடுத்தபின்  வாழ முடியாது 
               உன்னை என்  நினைவில்  இருந்து மாற்ற  முடியாது !
 
               உன்  இருவிழிகளின்  நேசம், அதுவே காதல் தேசம்
               அதுவே  நான் சரண் புக  தேடும் காதல்  தேசம்
               நினைப்பது நிறைவேறும்  நீ இருந்தால் என்னோடு,
               நடப்பது  நலமாகும்  நான் இருந்தால்  உன்னோடு !

              ரா.பார்த்தசாரதி

                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக