திங்கள், 9 ஜூன், 2014

மனிதனே ! உறவையும், நடப்பையும் உதறிவிடாதே





                          மனிதனே !   உறவையும், நட்பையும்  உதறிவிடாதே                     


         பழகும்  விதத்தில்  பழகினால்  பகையும்  நட்பாகும்                           
        மண்   எனப்  பிரித்தால்,  மனிதம்  என்றும்  சாகும்

         
இனம்  எனப்  பிரித்தால் இனிமை  
இல்லாமல் போகும

          சொந்தம் என  வாழ்ந்தால்  என்றும் சுகமாகும் ! 
        மனிதநேயத்துடன்  வாழ்ந்தால்  என்றும் நலமாகும் !

          பாசத்தையும், நேசத்தையும்  பாலமாக அமைத்திடு
        சாதி மத  பேதத்தை  வேரோடு  அழித்திடு 

          வயதிற்க்கும்,படிப்பிற்க்கும் என்றும் மரியாதை கொடுத்திடு  

          நட்பும், உறவும்  உன்  உடன்பிறப்பு  என நினைத்திடு  
       
        மன்னிக்கத்  தெரிந்த  மனிதனை  நல்லவன் என கருதிடு !

          கோபத்தையும், ஆணவத்தையும் அடக்கி உறவினை காத்திடு !
  
          மனிதனே, உறவையும்,நட்ப்பையும்  உன் உடன் பிறப்பு  என !நினைத்துடு 

       மனிதனே, உறவும், நட்பும்  ஓர்  இருசக்கர   வண்டிதானோ ! 
       நட்பையும், உறவையும் நீ  பணத்தினால் மதிகாததும் ஏனோ !  

      இதை  படித்தபின்பும், உறவையும், நட்பையும் உதறிவிடாதே !  


     ரா.பார்த்தசாரதி 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக