செவ்வாய், 3 ஜூன், 2014

தாயும் சேயும்


                                              தாயும்  சேயும்

                1.  தாயே  விலைநிலமாம்,  தந்தையே வித்தாம்,
                    குலம்  தழைக்க  வந்த  ஓர்  சொத்தாம் !


               2.  பெண்  முழுமை  அடைவதும்  தாய்மையாலே,
                    தாயாக  மாறுவதும்  அந்த தாய்மையாலே !.

              3.  கருவறையில்  உன்னை  வைத்து  பாதுகாத்தேன்,
                    எனக்கென்று  உண்ணாது  உனக்காக  உண்டேன் ! 

     
                4.  பிறந்த  மேனியுடன்  வெளியுலகில்  வந்தாய் 
                     தாய் தந்தையர்க்கு  மட்டற்ற  மகிழ்ச்சி தந்தாய் !


                5.  உனக்காக  கண்விழித்து  தூக்கத்தினை  மறந்தேன்,     
                     உனக்காக  பாசத்தையே பாலாக  பொழிந்தேன் !

               6.  எனது  அணைப்பே  உனக்கு அடைக்கலம்,     
                     எனது  மடியே  உனக்கு  தொட்டில் !.

              7.   உன்  பசி, தூக்கத்தை அழுகையால் வெளிப்படுத்துகிறாய்,        
                    உன்  கள்ளமில்லா  சிரிப்பால் கவலைகள்  போக்குகின்றாய் !

              8.   தோளையே தூளியாக்கி  உன்னைச்  சுமக்கின்றேன்,
                     உன்னை  வயிற்றில்  சுமந்ததை  விட  பாரமா ?


             9.  அன்னைக்கு    ஆயிரம்   பிரச்சனை  இருப்பு,
                  உன்னைக்  கட்டியணைப்பதில்தான் ஆனந்த களிப்பு.!


           10. எங்கள்  இல்வாழ்க்கையே  உன் படைப்பு ,
                 எங்கள்  வாழ்கையில்  நீ ஒரு Yenkal  துடுப்பு  !


           11. உன்  வளமே  எங்கள்   சிறப்பு ,
                 உன்  நினைவே  பாசத்தின்   பிணைப்பு  !


           12. குழந்தையின்  வளர்ப்பு  தந்தையின்  கடமையே
                 அன்னையின்  வார்த்தைகள் அன்பின் இனிமையே !

          13.   அன்னையைப் போல  ஒரு  தெய்வம்  இல்லை,
                  திசை  நான்கும்  அன்னையைப் போல் எவரும்மில்லை !.       
              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக