வியாழன், 5 ஜூன், 2014

உலக சுற்றுசூழல் தினம்

   



                                                      உலக  சுற்றுசூழல் தினம் 
                  

                 சுற்றங்கள்  சூழ  வாழும்   மனிதனே !
                 சற்றே சுற்றுப்புற  சூழலை  கவனிக்காமல்  இருப்பது  ஏன்?
                 பிற நாட்டினை மேற்கோள் காட்டும் உன் வார்த்தைகள் 
                 ஏன்  உனது  நாட்டிற்கு  செய்ய கழிவிரக்கம் கொள்கிறாய்!

                 மனிதனே !   உன் சுற்றுப்புற  சூழலையினை  பார் !
                 இதற்க்கெல்லாம்  நாமேதான்  காரணம்,
                 வீட்டின்  சுத்தம் ,   நோயின்  ஓட்டம்,
                 நாட்டின்  சுத்தம், சுகாதாரத்தின்  ஏற்றம் !

                 வீட்டிற்கு  ஓர் மரம், தெருவிற்கு பல மரம்',
                 வீட்டினை சுத்தமாக்கு , நாட்டினை பசுமையுடன் வளமாக்கு,
                 மனித வாழ்க்யினை . பொன்மயமாக்கு 
                 நமது  நாட்டினை பலவகையில் ஏற்றமுடியதாக்கு !

                 நமக்கு நாமே  சூளுரை  எடுத்துகொள்வோமே !
                 நமக்கு நாமே  தூய்மை எனும் விதையினை விதைத்துகொள்வோமே,
                 நாட்டிலும்  பசுமை புரட்சி  ஓங்க   பாடுபடுவோமே!
                 உலக  சுற்றுசூழல் தினத்தை  பயனுற செய்வோமே !

               ரா. பார்த்தசாரதி




        
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக