செவ்வாய், 3 ஜூன், 2014

L Murali Manivizha



மணிவிழா / சஷ்டி  அப்தபூர்த்தி வாழ்த்து மடல்
எல். முரளிதரன்                                                                            தேதி : 17-07-2013

சாஸ்திரி ஹால் சமுக கூடத்தில்  இன்று ஓர் கல்யாணமேடை ,
முரளிதரன், பிருந்தா முரளிதரன், தம்பதிகளின் மணிவிழா மேடை!

கல்யாணம் என்றாலே வைபோகமே,
வாரணமாயிரம்  பாடி வாழ்த்துவோமே !

ஆயிரம்  நிலவு (பௌர்ணமி) கண்ட இல்லற தம்பதிகளே,
என்றும் வாழ்வாங்கு வாழ்வீ ர்கள்  வையத்திலே !


அகவை அறுபது என்றும், அருமையும்  பெருமையும் உடையதன்றோ,
 தலைமையேற்று நடத்தும் மகளும்,மகனும் பெருமைக்குரியவர்கள் அன்றோ! ,

கணவன் என்றாலே  (கண் + அவன் ) என்பதாகும்.,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !

ஆயிரம் கைகள் நீட்டி மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் மனைவி, கணவனை மறப்பதில்லை !

திருமதி ஓர் வெகுமதி என்று கூறுவது பழக்கம் 
திருமதியின்  பெயரே பிருந்தா என்று அழைப்பது பழக்கம்!

கல்யாணம் என்றாலே உற்றார் , உறவினர்ககளின் , ஆசிர்வாதமே,
அகிலத்தில் சிறந்தது , தாய், தந்தையின்  ஆசிர்வாதமே !

ஆறு எழுத்தில் ( முரளிதரன் )   என்றும் நான்கு அடங்கும் ,
பிருந்தா எனும் பெயர் விளங்கும்.


காலமும் , காட்சிகளும்  என்றும் மாறும்,.
 உறவே என்றும் நிலைத்து வாழும்.!

அன்பும்  அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை 
பண்பும் பயனும் அது.   என்பது  வள்ளுவன் வாக்கு 








ரா. பார்த்தசாரதி , கமலா பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக