திங்கள், 2 ஜூன், 2014



                                      நினைக்கத் தெரிந்த மனமே


* தாயின் ஸ்பரிசத்தை
உன்
அரவணைப்பில் கண்டேன்!


* தந்தையின் நேசத்தை
உன்
கரம் பற்றி
நடக்கையில் கண்டேன்!


* காதலனின் மோகத்தை
உன் காதல் மொழிபேசும்
கண்களில் கண்டேன்!


* கணவனின் கரிசனத்தை
உன்,
"அடியேய்' எனும் ஒற்றை
வார்த்தையில் கண்டேன்!

* யாதுமாகி நின்றாய்!


* கண்ணீருடன்...
கண்ணியத்துடன்...
ஏற்கிறேன் உன்னை...
என்
உயிர் தோழனாய்!


* மீண்டும் பிறப்பெடுப்பேன்!
தாயாய்...
தந்தையாய்...
காதலனாய்...
கணவனாய்...
நீ காட்டும் அன்பினை
தனித்தனியாய் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்


ரா. பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக