ஞாயிறு, 9 டிசம்பர், 2012

veeraraghavan


                                           வீரராகவன்
கமலா, வேதாந்தம்  தம்பதினரின்  மூத்த புதல்வரே  !
என்றும்  கடமை, பக்தி, நல்லொழுகத்தில்  சிறந்து விளங்கியவரே !

காஞ்சியில் பிறந்து,  சென்னையில்  குடிபுகுந்தாய் !
கூட்டுறவுவிலும்,  குடும்பத்திலும்  சிறந்து விளங்கினாய் !

 வாழ்கைப்போரில் என்றும் வீரராகவனாய்  திகழ்ந்தாய் !
கடமையிலும், சொந்தபந்தங்கள்  இடையே சிறந்து விளங்கினாய் !

இருக்கும்போது மனிதனை எவரும் புகழ்வதில்லை !
இறந்தபின்  எவரும்  புகழாமல்  இருப்பதில்லை.!

மகன்களுக்கும், மகள்களுக்கும்  என்றும் சிறந்த தந்தையாய்  !
தங்கைகளுக்கும், தம்பிக்கும் சிறந்த  அண்ணனாய் !

பொறுமையிலும், ஒழுக்கத்திலும்  என்றும் சிறந்து விளங்கி,
பலரது  இகழ்சிகளையும்  சுமைதாங்கி போல்  தாங்கி ,

நல்மனம் கொண்டு நற்செயல்  புரிந்தாய் !
தாய்க்கும், தாரதாரத் திர்க்கும் நல்லவனாய்   திகழ்ந்தாய் !

ஆறுக்குள் ( வீரராகவன்) என்றும்  மூன்று அடங்கும் !
பத்மா  எனும் பெயர்  விளங்கும் !

கைப்பிடித்தவள்  வாவென்று ஓர் ஆண்டிற்குள் அழைத்தாளா ?
அவள் விருப்பம் நிறைவேற பின்தொடர்ந்தாயா?

அகவை அறுபதும்  என்பதும் கடந்து சென்றவரே !
ஆரா துயரில் ஆழ்த்தி  விண்ணுலகம் அடைந்தவரே !

நான்கும் அறிந்து, நான்கு தலைமுறை  கண்டாய் !
நற்செயல் புரிந்து இரவா  புகழ்  அடைந்தாய் !

பெற்றோரை  என்றும் பணிவுடன் வணங்கிடுவோம்  !
வாழ்வில் எல்லா வளம் பெற்று  வாழ்ந்திடுவோம்!


                                                                              ரா. பார்த்தசாரதி
                                                                                 ( பாச்சு )

  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக