ஞாயிறு, 9 டிசம்பர், 2012

manithanay

                     

      மனிதனே !    நட்பையும்,  உறவையும்   உதறிவிடாதே !   

பழகும்  விதத்தில்  பழகினால்  பகையும் நட்பாகும்  !

 சொந்தம்  என  வாழ்ந்தால்  என்றும்  சுகமாகும் ! 
மண்  என  பிரித்தால்  மனிதநேயம்  மறைந்துபோகும் !
இனம்  என  பிரித்தால்  இனிமை இல்லாமல்போகும்  !
மனித  நேயத்துடன்  வாழ்ந்தால், என்றும்  நலமாகும் 

பாசத்தையும்,   நேசத்தையும் , பாலமாக  அமைத்துடு !
சாதிமத   பேதத்தை  வேரோடு அழித்துவிடு !
வயதிற்கும், படிப்பிற்கும் என்றும் மரியாதைக் கொடுத்திடு ! 
நட்பும், உறவும், உன் உடன்பிறப்பு என நினைத்திடு !

மன்னிக்க தெரிந்த  மனிதனே  நல்லவன்  என  கருதிடு  !
கோபத்தையும், ஆணவத்தையும் அடக்கி உறவினை காத்திடு ! 
 மனிதனே, உறவும் ,நட்பும் ஓர்  இரு சக்ர  வண்டிதானோ !

 இரண்டுமே , ஓர்  நாணயத்தின்  இரு பக்கங்ககள்தனோ !
 நட்பையும், உறவையும், நீ  பணத்தினால் மதிக்காததும் ஏனோ !

இதை படித்த பின்னும் நட்பையும், உறவையும்  உதறிவிடாதே ! 


                                                                                      ரா. பார்த்தசாரதி   
               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக