வெள்ளி, 31 டிசம்பர், 2021



                              புத்தாண்டே  வருக  2022

கதிரவன் குணதிசையில் பன்முகமாய்  உதித்தான் ,
புலரும் புத்தாண்டை புதிதாய் உருவமெடுதான் 1


பூமியெங்கும்  அமைதியே ஆட்சியாக அமையாத புத்தாண்டே ,
மண்ணில் விழும் மழைத்துளியும், விண்ணில் வீசும் காற்றும் 
யாவருக்கும்  பொதுதானே புத்தாண்டே !

நதியால் இணைந்த  மாநில மக்கள் 
அவலம் அழிந்து போகாதோ  புத்தாண்டே !

எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே 
மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் புத்தாண்டே !


தீவிரவாதமும், லஞ்சமும், கருப்பு பணமும் ஒழியாதோ 
மக்கள் மனதில் நிம்மதி ஏற்படாதோ !

மக்களை அச்சுறுத்தும் நோய்கள் முடிவுக்கு வராதா 
அதனை தடுத்து நிறுத்த ஆவண செய்யாதா !

சுயநலங்கள்,  சூழ்ச்சிகள்  சுவடு தெரியாமல்
அவனியில்  அழிந்து போகாதோ  புத்தாண்டே !


நாட்டுக்கு நாடு, சமாதனம்  மட்டும் ,
தானமாய்   கிடைக்காதோ புத்தாண்டே !


ஆட்சியும்  அதிகாரமும் ஏழையின்
ஏக்கத்தை  தீர்காதோ  புத்தாண்டே !


சுயநலமற்ற ஆட்சியாளர்களும்,அரசியல்வாதிகளும் தோன்றமாட்டார்களா !
நாட்டிற்கு நன்மை ஏற்படுத்தமாட்டார்களா!

பூமியெங்கும் அமைதி மட்டும் 

ஆட்சி   புரியாதோ  புத்தாண்டே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக