செவ்வாய், 14 டிசம்பர், 2021

 


                                   ஷஷ்டிப்பதாபூர்த்தி  வாழ்த்து மடல் 

     வண்டலூர்: சென்னை                                                             தேதி : 15 டிசம்பர் 2021

அகவை  அறுபதும், எழுபது மற்றும் எண்பதும்   சிறப்புடையதன்றோ 
தவப்புதல்வன் ஜெயந்த்தும்  மருமகன்  காயத்ரியும்  தலைமையேற்று 
நடத்துவதும் பெருமைக் குறியதன்றோ!


கல்யாணம் என்றாலே வைபோகமே,
வாரணமாயிரம்  பாடி வாழ்த்துவோமே 

தென்னக  ரயில்வேயில்  சிறப்புற பணிபுரிந்து  ஓய்வு பெற்றாய்
மகனுக்கும்  திருமண நிச்சியம் செய்துவிட்டாய் 

கண்ணின் அருகே இமை இருந்தும், கண்கள் இமையைப் பார்ப்பதில்லை 
கண்களை இமைகள் காப்பதுபோல், மனைவி, கணவனை விட்டு பிரிவதில்லை 

கணவன் என்றாலே  (கண் + அவன் ) என்பதாகும்.,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !

காலமும், கோலமும்   என்றும் உலகில்  மாறும்,.
கணவன்  மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்.!

ஆயிரம் கைகள் நீட்டி மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் மனைவி, கணவனை மறப்பதில்லை !

திருமதி ஒரு வெகுமதி என்று அழைப்பது வழக்கம் !
திருமதியின் பெயரோ ஜெயஸ்ரீ   என்று அழைப்பது பழக்கம்! !

கல்யாணம் என்றாலே உற்றார்,உறவினர்ககளின் ஆசிர்வாதமே,
அகிலத்தில் சிறந்தது , தாய், தந்தையின்  ஆசிர்வாதமே !

ஆறில்  என்றும் மூன்று  என்றும்  அடங்கும் 
ஜெயஸ்ரீ  என்ற பெயரும் விளங்கும்,

உற்றார், உறவினர்களும், பேரன்,பேத்திகளும் ஆசி பெறட்டும் 
வயதில் மூத்தவர்கள் தங்கள் ஆசியை நல்மனதுடன அளிக்கட்டும்! 

உற்றாரும், உறவினர்களும், ஒன்றுகூடி விருந்துண்போம் 
அவர்கள் வாழ்க்கை வளம் பெற  வாழ்த்துவோம் 

அன்பும்  அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை 
பண்பும் பயனும் அது.   என்பது  வள்ளுவன் வாக்கு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக