திங்கள், 12 மே, 2014

காதல் மட்டுமே ...



                                                       காதல் மட்டும்   சுகமே


எனக்காக
மணவறையில்
கண்ணீர்விட்டபோது
காதல்  சுகம்தான்-ஆனால்

இனி இந்த
காதல் எனதில்லையே!......

என்னை தேடி அலையும்
உனது   ஈர விழியில்
வாழ்கிறது நம் காதல்
காதல் சுகமானது.....


இனி இந்த
காதல் எனதில்லையே!......


உன் விழியின் ஈரம்
சொல்கிறது
என் மேல் உள்ள காதலை
காதல் சுகமானது............


இனி இந்த
காதல் எனதில்லையே!......

காதலனை கைவிட்டு
கணவனை கைபிடித்த  நீ
வாழ்க பல்லாண்டு !

அனல் பறக்கும்
கோபங்கள் ஏன்?

சின்னதாய்
சிரிக்ககூடதா?

மௌனம் என்ற
இடி எதற்கு
சில வார்தைகள்
பேசக்கூடாதா ?

உன்னில்
இதுவும் பிடித்திருக்கு......


கோபம் தாண்டி
உன் புன்னகை
இதுதான் காதலா ?......


சொல்லவரும் வார்த்தைகள்
காணாமல் போகின்றன
பெண்ணே உன் கண்ணை
காணும்போதெல்லாம்


என் வார்த்தைகளுக்கு
மதிப்பில்லாமல் போகிறது
அன்பே நீ  பேசும் போதெல்லாம்

உயிருடன் இருந்தும்
இறந்தது  போகிறேன்
கண்ணே நீ என்னை
வெறுக்கும் போதெல்லாம்

சொல்லாமல் தவிக்கிறேன்
நீ என்னை
கடந்து செல்லும் போதெல்லாம்

 உன்விழிகள்
என் வார்த்தைகளை
 கொள்கிறது

 உன் பார்வை
என்னையும் என்காதலையும்
 கொள்கிறது

வெற்றி பெற்றவனுக்கு
அமுதம்
தோல்வி கண்டவனுக்கு
ஆழகால விசம்
இதை தெரிந்தும் தெரியாமல்
வாழ்பவனுக்கு
புரியாத புதிர்

ஏன் இந்த ஆரவாரம்
ஏன் இந்த  சந்தோசம்
ஏன் இந்த  இன்ப மழை

இன்பம் நிலையில்லை
துன்பம் மட்டும் வாழ்வில்லை
இப்பொழுதுதான்  தடுமாறுகிறது
என்  இதயம் -காரணம்
காதல் மட்டுமே .........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக