புதன், 19 மே, 2021

Penne pala pattangal



                                              பெண்ணே !  பட்டங்கள்  பல  

              1.    முதிர்கன்னியாய்  முப்பது வருடங்கள்  கழிந்தாலும் 
                     ஏன் என்று கேட்காத  ஊர் உலகம்.

             2.    காதலித்தவன்  கைப்பிடித்து போனால் 
                    கொடுக்கும் பட்டமோ  " ஓடுகாலி ".

             3.    கைபிடித்தவாள்  காலமெல்லாம் காப்பாற்றுவான் 
                    என்று நினைத்து, பின் கழற்றிவிட்டு போனால்      
                    கூசாமல் கொடுக்கும் பட்டமே " வாழாவெட்டி "       

            4.    கட்டியநாள்முதல்,  கட்டில் ஆடியும்,
                   தொட்டில் ஆடாவிட்டால்  அட்சதை 
                   தூவி ஆசிர்வதித்த  அதே  கையே 
                   கொடுக்கும் பட்டமே  "மலடி "

          5.      விதிசெய்த  சதியால் கட்டியவன் 
                   காலமாகி கலங்கிநிற்கும் பேதைக்கு 
                   கலப்படமில்லாமல்  கொடுக்கும் 
                   பட்டமே " விதவை "

         6,      பெண்ணே ! பல பட்டங்களை பெறாவிட்டால் என்ன,
                  பெண்களுக்காகவே  பல வழங்க காத்திருக்கிறது 
                 வள்ளலான  இவ்வுலகம்.

        7.      பெண்ணே!  உன்னால் முடியாதது உண்டோ 
                 அன்பிற்கும், பாசத்திற்கும் என்றும் வளைந்து கொடு 
                 ஆணவத்தையும்  அகம்பாவத்தையும் என்றும் எதிர்த்திடு 
                 உரிமைக்கும், உறவிற்கும்  என்றும்  கைகொடு !

        8.      வாழ்ந்தாலும் ஏசும் !  தாழ்ந்தாலும்  ஏசும் !
                 தன்னம்பிக்கையோடு  வாழ்நாள்  முழுதும்  
                 தன்மானமுள்ளவளாய்  இந்த தரணியே பேசட்டும் 
                திறமையும், மனஉறுதியும் கொண்டு செயல்படு !      

               ரா.பார்த்தசாரதி 
 
                    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக