சனி, 5 ஆகஸ்ட், 2017

சந்தோஷம் என்றும் நம் பக்கம்





          

                       சந்தோஷம் என்றும் நம் பக்கம்


      சந்தோஷம்  என்றும்  நம்  பக்கம்,
.     சந்தோஷம்    என்றாலே மனிதனுக்கு  பாதி  பலம் ,
      அது  இல்லையெனில்  மனிதனுக்கு ஏது  பலம்,
      சந்தோஷம்  நாம்  வாழ்க்கையில் தேடுவது ,
      எப்பவும்  எல்லோர்  நெஞ்சுக்குள் நினைப்பது 
      போதுமென்ற  மனம் இருந்தால் தானே வருவது ! 


  .   சூரியனைக்  கண்டால்  தாமரை
      சந்தோஷத்துடன்  மலர்ந்துதானே பழக்கம்,
       
      கார்முகில்கள்  திரண்டு  வந்து 
      மழை தந்துதான்  பழக்கம்,
                              
      மழையைக்  கண்டால்  மயிலுக்கு 
      மகிழ்ச்சியுடன்  ஆடித்தான்  பழக்கம்,
   .
  .   காட்டில்  உள்ள  குயிலுக்கோ 
      சந்தோஷத்துடன்  கூவிதான்  பழக்கம்.
       
      கிடைத்ததை  மனதிற்கொண்டு  நடப்பவை 
      எல்லாம்  நன்மைக்கே  என  தெளிந்தால் 
      வாழ்வில்  சந்தோஷம்  என்றும் நம் பக்கம்.!
  .

.       ரா. பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக