செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

பொருள் ஒன்று, பயன் வேறு





                                             பொருள் ஒன்று, பயன் வேறு



உலை அரிசிக்கு தெரிவதில்லை - அது
உருமாறி பலரின் பசியாற்றப் போவது!

ஊறும் அரிசிக்கு தெரிவதில்லை - அது
அரைபட்டு பின் அடுப்புக்கு போவது!

அட்சதை அரிசிக்கு தெரிவதில்லை - அது
மங்கலப் பொருளாகி ஆசிர்வதிக்கப் போவது!

வாய்க்கரிசிக்கு தெரிவதில்லை - அது
சந்ததிகள் கையால் சவத்தின் வாய்க்கு போவது!

ரேஷன் அரிசிக்கு தெரிவதில்லை - அது
ஏழை வீட்டில் மட்டுமே உணவாகப் போவது!

அரிசி ஒன்று தான் - ஆனால்,
பயன் வேறு வேறு!

 மலர்கள்  ஒன்று சேர்ந்து   திருமண மாலையாகிறது   
மலர்கள் சிதறி சவ ஊர்வலத்தில் மிதிபட்டு பாழாகிறது !

 மாவிலை தோரணமாகி கல்யாண வீட்டில் தொங்குகிறது 
மாவிலை காய்ந்தால் சருகாகி ,எருவாகி பூமிக்குள் அடங்குது !

தென்னை மரம் சுவையான இளநீர் தந்து தாகம் தீர்க்கிறது 
அதன் ஓலையோ சவத்திற்கு படுக்கையாகிறது !

வாழ்க்கை ஒன்று தான் - அது
வாழ்பவனையும், வாழும் விதத்தையும் பொறுத்தது!

  ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக