வியாழன், 31 ஆகஸ்ட், 2017

தாயும், தாய்மையும்




                                  தாயும், தாய்மையும்

பெண் பெருமை  அடைவதும்  தாய்மையாலே,
தாயாக  மாறுவதும்  அந்த   தாய்மையாலே 

சத்தியாவின் மனைவி  நந்தினிக்கு   பூச்சூட்டல்! 
சத்தியாவின் அன்பு மனைவியாம்,
பாசமும், நேசமும்  கொண்டவளாம் ,
மடிப்பாக்கத்தில் இனிதே சத்தியாவுடன்  வசிப்பவளாம் !
என்றும் சீரும் சிறப்புடன் 
குடும்பத்தின் குலவிளக்காய்  திகழ,
அவள்தன்  இனிய இல்லத்திற்கு ,
பூச்சூட்ட வாருங்கள், பூச்சூட்ட வாருங்கள் !

மல்லிகை, முல்லை, தாழம் என பல மலர்கள் பூச்சூட்டி,
மணம்  கமிழ், சந்தனமும்,  பன்னீரும்  தெளித்து,
 வண்ண வளையல்களை கைய்யிலே அணிவித்து,
அவள் தன்  வாழ்வில் எல்லா வளம் பெற,
நலங்கிட்டு, நன்மனம் கொண்டு இன்றே வாழ்த்திடுங்கள் !  

தாயும், சேயும்  நலம் பெற, நன்மகளை   பெற்று தர,
நந்தினியை நன்மனம் கொண்டு  வாழ்த்துவோம் !

பூமிக்கு முகவரி வந்ததும் பெண்ணாலே !
பூவிற்கு நறுமணம் வந்ததும் பெண்ணாலே !
பூமகள் (நந்தினி ) பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
பொன்மகள் என(அம்ருதாவை) வாழ்த்திடுவோம்  அன்பாலே !

ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக