வியாழன், 8 ஜூன், 2017

பெண்ணடிமை




                                                     பெண்ணடிமை 

தலையாட்டி பொம்மைகளா  நினைக்கும் நிலைமையா ?
தாய்க்குலத்தின்  வாய் பேசா வனிதையா ? 
சாவி கொடுத்தால் சலங்கை ஒலி தாலமிடத் 
தாவி ஓடும் பாவைகளா!

தன்  ஆசைகளை, புதைத்து வைத்து வெளியிடமுடியாத  ஊமை 
பணம் இருந்தும், அதனை செலவு செய்ய முடியாத நிலைமை 

திரைப்படங்களில் வரும் தேனிலவு ,
வானிலவுத் தேவதைகளா !
தொப்புள் கொடி அறுந்ததும் அப்பனுக்கு அடிமை,
தாலிக்கொடி யேறியதும் கணவனுக்கு அடிமை,
வேலைக்கு போன ஊழியத்தில் மேலதிரிகாரிக்கு அடிமை,
முதுமையடைந்ததும், பிள்ளைகளுக்கு  அடிமை !


வாழ்க்கையில் உனக்கு இல்லாத பட்டமா !
விதவை, மலடி, உடன்கட்டை ஏறுடி,
வரதட்சணை வர்த்தகி !

வரதட்சணை கொடுக்காதவளை  கண்டாலே காஸ் அடுப்பு வெடிக்கும் 
தட்டிக் கேட்க  யார் வந்தாலும்  பணத்தினால் மூடி மறைக்கும்!

புகுந்த வீட்டில் மாமியாருக்கு அடிமை,
ஆணைப்  பெற்றவளும் நீதான் 
பெண்ணைப் பெற்றவளும் நீதான் 
ஆயினும், வீடும்,நாடும் உனக்கு பொல்லாத சிறைதான் !

தலையாட்டம் நின்று, தலை நிமிர்ந்து 
என்று வீதியை எதிர்க்கின்றாயோ 
அன்றுதான் உனக்கு விடுதலை பெண்ணே !

ரா.பார்த்தசாரதி





.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக