செவ்வாய், 7 ஏப்ரல், 2015

தாய்மை என்னும் தூய்மை

                                                   தாய்மை என்னும் தூய்மை


  மலையிலிருந்து நதிகள்  பல  பிறக்கின்றன
 நதிகளை  அன்னைக்கு  நிகர்  என சொல்கிறோம்! 
  நன்முறையில் அணை போடுவது நல்லதே,
  கழிவுநீரை கலக்குவது என்றும் தீமையானதே!

  வாழும் உயிரினம்  வாழா  வேண்டுமே
  நீரை குடிபவர்களுக்கும், கேடு விளையுமே
  பயிர்களை  அழிப்பதா , மக்கள்நலம்கெட வைப்பதா ! 
 தெரிந்தும்  தண்ணீரை அசுத்தபடுத்துவதா !

 இன்று நதி நீரை மனசாட்சியின்றி கலங்கப்படுத்துகிறோம் ,
 தூய்மை  என்பது  தாய்மையின்  வடிவமே
 தாய்மை  என்னும் தூய்மை  காக்கபடவேண்டுமே
 இதனை நன்முறையில் அரசாங்கமே  நிறைவேற்றவேண்டுமே !


 ரா.

  

ஆரோக்கிய தினம்





                                                   ஆரோக்கிய தினம்


        உலகில், அனைவரும் ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் நல்லது,
        நல்ல உணவும்,உடற்பயிற்சியும்  ஆரோக்கியத்திற்கு நல்லது ,
        சோம்பேறித்தனமும், முயற்சியின்மையும் ஆரோக்கியத்திற்கு கேடாகும்,
         தீய பழக்கங்கள் என்றும் ஆரோக்கியத்திற்கு  கேடாகும்!

         உடலில் ஆயிரம் வியாதி, பெயரோ ஆரோக்கியசாமி,
        நோயின்றி வாழ நல்ல ஆரோக்கியம்  தேவை,
        உடல்  ஆரோக்கியம் பெற சத்துணவு  தேவை,
        உடல் வலிமை பெற  நல்ல உடற்பயிற்சி  தேவை !

       சுவர் இருந்தால்தான், சித்திரம் எழுத  முடியும்
       ஆரோக்கியமாய் இருந்தால்தான் வாழ்க்கை வளர்சியடையுமே 
        நல்ல உணவும், உடற்பயிற்சியும் மேற்கொள்வோமே ,
       மனதில் இறுக்கம் இன்றி, ஆரோக்கியத்தை பேணுவோமே  !
       

      ரா.பார்த்தசாரதி

திங்கள், 6 ஏப்ரல், 2015

படக்கதை -7

                                                              படக்கதை -7

                                                          தந்தையும்  மகனும்

                   சுமப்பதும், தாங்குவதும் தாய் தந்தையே
                   தாய் உன்னை வயிற்றில் சுமக்கிறாள் 
                   தந்தையோ உன்னை தோளில் சுமக்கின்றான்
                  காதலியோ உன்னை  கண்ணில் சுமக்கிறாள் !


                 தோளில்  தாங்கி  உனக்கு  உலகை காட்டுகின்றேன்
                  தாயோ  அன்பும்,  பாசமும் உன்னிடம் காட்டுகிறாள்
                  அறியாப்   பருவத்தில் உனக்கு நான்  வழிகாட்டி
                   முதுமைப் பருவத்தில் நீதான் என் வழிகாட்டி !

                  ஒன்றை மட்டும் உனக்கு  உணர்த்துகின்றேன்
                   பணம்  எட்டிபார்க்கும், பாசம் பக்கத்தில் நிற்கும் ,
                   பணத்திற்காக  பாசத்தை தொலைத்து விடாதே
                   பாசத்தை விலைகொடுத்து  என்றும் வாங்கிடமுடியாதே!
 



சனி, 4 ஏப்ரல், 2015

மன்மத ஆண்டே வருக 2015





மன்மத  ஆண்டே  வருக  2015

கதிரவன் குணதிசையில் பன்முகமாய்  உதித்தான் ,
புலரும் மன்மத ஆண்டை  புதிதாய் உருவமெடுதான்,
தமிழ் வருடங்கள் அறுபது என சொல்வோம் 
அழகிய மன்மத வருடம் உதித்ததே என கூறுவோம் 



பூமியெங்கும்  அமைதியே ஆட்சியாக அமையாத புத்தாண்டே ,
மண்ணில் விழும் மழைத்துளியும், விண்ணில் வீசும் காற்றும் 
யாவருக்கும்  பொதுதானே தமிழ் புத்தாண்டே !
நதியால் இணைந்த  மாநில மக்கள் 
அவலம் அழிந்து போகாதோ  புத்தாண்டே !

கடல் கடந்து தொழில் செய்தாலும்,  கைது செய்தாலும்,
பிறர் நம் பொருளை  கைப்பற்றினாலும், யாருக்கு  இழிவு, 
எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல தீர்மானத்துடனே, 
மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் தமிழ் புத்தாண்டே !


சுயநலங்கள்,  சூழ்ச்சிகள்  சுவடு தெரியாமல் 
அவனியில்  அழிந்து போகாதோ  புத்தாண்டே !
ஜாதிப்  பிரிவினைகள்  மாறி என்றும் 
வேற்றுமையில் ஒற்றுமை ஒங்காதோ புத்தாண்டே !


நாட்டுக்கு நாடு, மாநிலத்திற்கு,மாநிலம் சமாதனம்  மட்டும் ,
தானமாய்   கிடைக்காதோ புத்தாண்டே !
ஆட்சியும்  அதிகாரமும் ஏழையின் 
ஏக்கத்தை  தீர்காதோ  புத்தாண்டே !
பூமியெங்கும் அமைதி மட்டும் 
ஆட்சி   புரியாதோ  புத்தாண்டே

ரா.பார்த்தசாரதி 

.


செவ்வாய், 31 மார்ச், 2015

மாடு மேய்க்கும் பெண்ணே


 மாடு  மேய்க்கும் பெண்ணே

ஒத்தையடிப்  பாதையில்  கொம்புடன் செல்கின்றேன்
என் பசு மாட்டை மேய்ப்பதற்கு கூடச் செல்கின்றேன்
என் பிழைப்பே  இந்த பசுமாட்டின்   வளர்ச்சி
என் வாழ்வில் என்றும் எனக்கில்லை தளர்ச்சி !
காய்ந்த மண்ணும், மேடும் தாண்டி
காட்டிற்கு  ஓட்டிச்  செல்கின்றேன் என் பசுவை
கன்றை விட்டு பசுவை  மேய்கின்றேன்
என் மகனை விட்டு  தனிமையில் ஏங்குகின்றேன் 
பசு மேய்ந்தாலும்  தன் கன்றை மறப்பதில்லை
மகன் தாயை விட்டுப் பிரிந்தாலும், தாய் மறப்பதில்லை
பசுவையும், கன்றையும்  என் வீட்டில் வளர்கின்றேன்
இரண்டையும் என் மகன்போல் வளர்க்கின்றேன் !
வளர்க்கும்போது  எந்த உறவும் சிறிது காலமே நிலைக்கும்,
பறவையும், பறக்க தெரிந்ததும், கூட்டை விட்டு விலகும்
பசு தன்  உணவை  மெல்ல அசைபோடும்
நீயோ , உன் வாழ்வின் அனுபவத்தை  அசைபோடுகிறாய் !
ரா.பார்த்தசாரதி 

வியாழன், 26 மார்ச், 2015

ராமன் எத்தனை ராமனடி



                                             ராமன் எத்தனை  ராமனடி 

     ராமன் பிறந்ததும்  நவமியிலே 
    கிருஷ்ணன் பிறந்ததும் அஷ்டமியிலே ,
    இரண்டும் கடவுளின் அவதாரங்களே 
    இராமாயணம், மகாபாரதத்தின் நடுநிலை  நாயகர்களே !

   ராமானயத்தின், காவியத் தலைவன் ராமனே 
  பிறன்மனை நோக்குபவனை தண்டித்தவனும் ராமனே 
   நட்புக்கு இலக்கணமாய்  இருந்தவனும்  ராமனே 
   ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவனும் ராமனே !

  ராம நாமமே  நலம் தரும் நாமமே ,
  அனுதினம் சொன்னாலே நன்மை அடைவதும் திண்ணமே !
  யாவருக்கும்  நன்மை அளிக்கும்  நாமமே 
 ஈசன் வாயுரைத்த சிறப்புமிக்க நாமமே !

புனர்பூசம்  நக்ஷத்திரத்தை  ராமனின்  பிறந்த நாளாக கொண்டாடுவோமே 
 பானகமும், சுண்டலும், பருப்பும், மோரும் நிவேதனமே 
ராமன் எத்தனை  ராமனாய்  இருந்தாலும் ,அவரது குணம் சிறந்ததே, 
அதிலும் அவரது  கல்யாணகுணங்கள் மிகவும் சிறப்புடையதே !

ரா.பார்த்தசாரதி