சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்
1. காசு கொடுத்து வாங்கவில்லை என்றாலும், பல உயிர்களை
காவு கொடுக்காத குடும்பங்கள் இல்லையென சொல்லும்
அளவுக்கு சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் !
2. சுதந்திர தினம் கொண்டாடுவதை விட கொடுத்து உணர்வதே
சுதந்திரத்தின் முழுமை !
3. எதை வேண்டுமானாலும் பேசி செல்ல வாங்கவில்லை சுதந்திரம் .
பேசியதை செயல் படுத்துவதே முழு சுதந்திரம் !
4. மதுவுக்கு அடிமையாகி மாண்டபின், மானியம் வாங்கிட
வாங்கவில்லை சுதந்திரம் !
5. மாற்றி முயற்சித்து மதியால் பிழைத்திடவே முழு சுதந்திரம்!
6. பதவி வைத்து பத்தும் செய்ய வாங்கவில்லை சுதந்திரம்
பத்திரமாக மக்களை வாழ வைக்கவே முழு சுதந்திரம் !
7. சொத்து சேர்க்க இயற்கையை அழிக்க வாங்கவில்லை
சுதந்திரம் .
8. செத்து விடாமல் சுற்றுசூழல் காக்கவே முழு சுதந்திரம் .
9. நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர், தியாகிகளை
மதிப்பதற்காகவே முழு சுதந்திரம் !
10, தேசிய தலைவர்கள் சிந்திய ரத்தம் எழுதிய இந்தியா எனும்
சித்திரம்
11. இளைஞ்சர்கள் கையில் ஆட்சி மாறட்டும். மக்களுக்கு நன்மை
பிறக்கட்டும்,
12. முதலமைச்சர், பிரதமர் யார் வந்தாலும் மக்களின்
நன்மை கொண்டு இச்சுதந்திரநாளை வரவேற்போம் நன்றி
தொகுத்தவர் : ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக