வியாழன், 26 மார்ச், 2015

ராமன் எத்தனை ராமனடி



                                             ராமன் எத்தனை  ராமனடி 

     ராமன் பிறந்ததும்  நவமியிலே 
    கிருஷ்ணன் பிறந்ததும் அஷ்டமியிலே ,
    இரண்டும் கடவுளின் அவதாரங்களே 
    இராமாயணம், மகாபாரதத்தின் நடுநிலை  நாயகர்களே !

   ராமானயத்தின், காவியத் தலைவன் ராமனே 
  பிறன்மனை நோக்குபவனை தண்டித்தவனும் ராமனே 
   நட்புக்கு இலக்கணமாய்  இருந்தவனும்  ராமனே 
   ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவனும் ராமனே !

  ராம நாமமே  நலம் தரும் நாமமே ,
  அனுதினம் சொன்னாலே நன்மை அடைவதும் திண்ணமே !
  யாவருக்கும்  நன்மை அளிக்கும்  நாமமே 
 ஈசன் வாயுரைத்த சிறப்புமிக்க நாமமே !

புனர்பூசம்  நக்ஷத்திரத்தை  ராமனின்  பிறந்த நாளாக கொண்டாடுவோமே 
 பானகமும், சுண்டலும், பருப்பும், மோரும் நிவேதனமே 
ராமன் எத்தனை  ராமனாய்  இருந்தாலும் ,அவரது குணம் சிறந்ததே, 
அதிலும் அவரது  கல்யாணகுணங்கள் மிகவும் சிறப்புடையதே !

ரா.பார்த்தசாரதி  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக