செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

Sundanthira dinam 2026. (Revised)


சுதந்திர காற்றை சுகமாய் சுவாசித்த  நன்னாள் ! 
அஹிமிசை  வழியில் கிடைத்த அன்புத்திருநாள். 
அடிமைச்  சங்கிலியை உடைத்த அற்புதமான நாள் 
வெள்ளையரை வெளியேற்றி வெற்றி பெற்ற பெருநாள் !
கம்பிரமாய் மணிக்கொடி தரும் ஆனந்த திருநாள்.
சுதந்திர காற்றை சுகமாய் சுவாசிக்கின்ற நன்னாள் !

பாரதி கூறுகிறார் - ஜாதிகள் இல்லையடி பாப்பா ! பயம் கொள்ளாதே 
பாப்பா, குலத்தாழ்ச்சி, உயர்ச்சி  சொல்லல் ஆகாது பாப்பா என்கிறார். 
உச்சி மீது வானிடிந்து போயினும் அச்சமில்லை, அச்சமில்லை ! என்றும் 
யாதும் ஊரே ! யாவரும் கேளிர், தீதும், நன்றும் பிறர் தர வாரா ! எனும் 
பொது மறையை உணர்த்தியதும் நம் நாடு !  ஒன்றை மட்டும் கூறுகிறேன் !

           சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் 

          1. காசு கொடுத்து வாங்கவில்லை என்றாலும், பல உயிர்களை 
               காவு கொடுக்காத குடும்பங்கள் இல்லையென சொல்லும் 
              அளவுக்கு சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் !

        2.  சுதந்திர தினம் கொண்டாடுவதை விட கொடுத்து உணர்வதே 
             சுதந்திரத்தின்  முழுமை !

        3.  எதை வேண்டுமானாலும் பேசி செல்ல வாங்கவில்லை சுதந்திரம் .
             பேசியதை செயல் படுத்துவதே  முழு சுதந்திரம் !

      4.   மதுவுக்கு  அடிமையாகி மாண்டபின், மானியம் வாங்கிட  
            வாங்கவில்லை சுதந்திரம் !

     5.    மாற்றி  முயற்சித்து மதியால் பிழைத்திடவே முழு சுதந்திரம்!

     6.   பதவி  வைத்து பத்தும் செய்ய வாங்கவில்லை சுதந்திரம் 
            பத்திரமாக மக்களை வாழ வைக்கவே முழு சுதந்திரம் !

    7.    சொத்து சேர்க்க இயற்கையை அழிக்க வாங்கவில்லை 
           சுதந்திரம் .

   8.    செத்து விடாமல்  சுற்றுசூழல் காக்கவே முழு சுதந்திரம் .

  9.     நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர், தியாகிகளை 
          மதிப்பதற்காகவே  முழு சுதந்திரம் !

10,   தேசிய தலைவர்கள் சிந்திய ரத்தம் எழுதிய  இந்தியா எனும் 
        சித்திரம் 

11.  வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு வளர்ச்சிக்கு உதவுவோம் ! 

12..   இளைஞ்சர்கள் கையில் ஆட்சி மாறட்டும். மக்களுக்கு நன்மை 
        பிறக்கட்டும்,

        முதலமைச்சர், பிரதமர்  யார் வந்தாலும் மக்களுக்கு நன்மை 
         செய்பவரையே   இச்சுதந்திரநாளில்  வரவேற்போம்  நன்றி !

மேலும் பாரதி கூறுகிறார் :  தாயின் மணிக்கொடி பாரீர் ! அதை தாழ்ந்து 
பணித்திட வாரீர்! ஓங்கி வளர்ந்த்தோர்  கம்பம் அதன் உச்சியின் மேல் எங்கள் தாயின் மணிக்கொடி பறக்குது பாரீர் !  வந்தே மாதரம் என்போம் நம்  பாரதம்  காப்போம்  எனக்  கூறுகிறார் !  இங்கே கவிதை பாட பாரதிதாசன், பாரதி இல்லாவிடினும் உங்கள் முன் 
பார்த்த சாரதியாக நின்று விடை பெறுகிறேன் !  

ஜெய் ஹிந்த் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக