செவ்வாய், 28 ஏப்ரல், 2015

உலக தொழிலாளர் தினம்

                                                உலக தொழிலாளர் தினம்

தொழில் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தொழிலாளியின் பங்குண்டு,
அவர்கள் உரிமைகளையும், நலனையும் காக்க பல சங்கங்கள் உண்டு
தொழிலாளர்களின் நலமும், உரிமையும்,சரிவர காக்கப்படவில்லை ,
அரசாங்கமும், முதலாளிகளும், இதனை சரிவர நிறைவேற்றுவதில்லை !

முதலாளி,  தொழிலாளியை கைப்பொம்மையாக ஆட்டி வைப்பதும்
தொழிலாளியை  அடிமையாக எண்ணும்  எண்ணம்
ஏன் நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம்
இம்மனப்பாங்கே தொழிலாளர்கள் துன்பம்  அடைவது திண்ணம் !

தன் முன்னேற்றமே பெரிதென நினைக்கும் முதலாளி
தொழிலாளர்களை கசக்கிப் பிழியும் தன்மை
ஏனோ தொழிலாளர்களிடத்தில்  ஏற்படும் வன்மை,
இதனால் தொழிலாளி வர்க்கம் அடைவதோ தீமை!

சட்டங்களும், நலச்சங்கங்களும் தொழிலாளியின் நலன் காக்கவே,
அங்கேயும்  அரசியல் நுழைந்து  அவைகளை கெடுக்கவே
காலத்திற்கேற்ப சட்டதிடங்களை தங்கள் விருப்பதிற்காக வலைப்பதுண்டு
இதனால் தொழிலாளர்களும் பாதிப்பு  அடைவதுண்டு !


தொழிலாளர்களின்  சிலை கடற்கரையில் அமைந்ததுள்ளதே
அவர்களின் கண்ணீரோ கடலில் கரைகின்றதே
உரிமைக்கும், நலனுக்கும், நீதி கிடைக்க போராடுவோம்
சபதம் ஏற்போம்    உலக தொழிலாளர்  தினத்தன்று !


ரா.பார்த்தசாரதி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக