திங்கள், 4 மே, 2015

தாய்மையின் மகத்துவம்

                                                 தாயும், தாய்மையும் 


 ஆணிற்கு கிடைக்காத  ஓர்  பரிசு 
பெண்ணிற்கு மட்டும் கிடைக்கும் பரிசு 

தன் வயிற்றில் ஒரு உயிரை வளர்கின்றாள் 
கவள உணவையும் குழந்தைக்காக  உண்கின்றாள் !

என்னதான்  விஞ்ஞானம், வசதிகள் வளர்ந்தாலும்,
ஆண்  தன்னைப் பற்றியே  நினைத்திருந்தாலும் ,

பத்து நிமிடங்கள் நின்றாலும் கால் கனத்து வலிக்கும்,
பத்து மாதம் சுமந்தாலும் கருவறைச்சுமை வலிப்பதில்லை !

வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்
இந்த வலியால் மற்றொரு உயிர் வருவதை காண்பார்கள் !

குழந்தை, சிறுமி, குமரி,மனைவி என்கிற பல உறவானதே ,
தாய்மையில்தான்  ஒரு பெண் தன்னிறைவு பெறுகின்றதே !

குழந்தையை கொஞ்சுவது ஆணுக்கும், பெண்ணுக்கும் பேரின்பம்,
குழந்தையை  கட்டி அணைப்பதில்தான் தாய்க்கு தனி இன்பம் !

தாய்மையின் மகத்துவம்,  என்பது பெண்ணின்  பெருமை 
தத்துரூபமாகவும், தத்துவமாகவும் இருப்பதே உண்மை!  


ரா.பார்த்தசாரதி 



    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக