சனி, 5 நவம்பர், 2022

thamizhum, panpaadum, kalacharamum

 


                                           தமிழும்,  பண்பாடும் , கலாச்சாரமும் 

                   கல்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி 
                   தமிழின் பெருமையும், ஆண்ட அரசர்களின் வம்சம் 
                  இளங்கோவடிகள் சிலப்பதிகாரம்  இயற்றியார் 
                  கல்லிலே கைவண்ணம் காண கற்கோவில் அமைத்தான் 

                  தமிழனின் பெருமையை  உலகெங்கும் பரப்பினான் 
                 கம்பன் கண்ட  ராமாயணம் என்றும் சிறப்புடையதன்றோ 
                 வள்ளுவனின் திருக்குறள் என்றும் பொதுயுடமையன்றோ 
                 கல்விக்கும்,  புகழுக்கும் பொது அதிகாரம் அமைத்தான் 

                 நம் முன்னோர்கள் ஆன்ற அறிஞர்கள் என  அறிந்ததே 
                திசையை எட்டாகவும் , இசையை ஏழுகவும் பிரித்தான் 
                சுவையை ஆறாகவும், நிலத்தை ஐந்தாகவும் பிரித்தான் 
                காற்றை நான்காகவும் ,மொழியை மூன்றாகவும் பிரித்தான் 

                வாழ்க்கையை மட்டும்,  அறம், புறம் என இரண்டாக பிரித்தான் 
                மனித ஒழுக்கத்தை  மட்டும் ஒன்றாய்  அமைத்தான் 
                ஒழுக்கத்தை  உயிரினும்  மேலாய் கருதச் சொன்னான்
                யாதும்  ஊரே, யாவரும் கேளிர்,எனபொதுவுடைமையாக்கினான் 

                 ரா.பார்த்தசாரதி.
                    
                    
                      
                        
                      
                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக