வியாழன், 29 டிசம்பர், 2022

Vasumathi Sridharan

 



         1.  அலர்மேலுமங்கை சமேத, ஸ்ரீநிவாசப்  பெருமாள் ஆசியுடன் 
              சதாபிஷேக  விழா !

        2.  ஆண்டவன் ஆஸ்ரமத்தில்  01-01-2023 அன்று நடக்கும் விழா 
              திரு. ஸ்ரீ. ஸ்ரீதரனுக்கும் , திருமதி வசுமதிக்கும் சதாபிஷேக விழா !

      3.    அகவை அறுபதும், எண்பதும் என்றும் சிறப்புடையதன்றோ 
              மகள் ஸ்ரீமதியும், மகன் விஜய்யும், தலைமையேற்று நடத்துவதும் 
                                                                                                       பெருமைக்குரியதன்றோ !
     4.      ஆயிரம்  நிலவை  கண்ட  இல்லறத்  தம்பதிகளே 
              என்றும் வாழ்வாங்கு வாழ வேண்டும் வையகத்திலே !

     5.      சதாபிஷேக விழா என்றாலே ஆசி வழங்குவதாகும்,பெறுவதாகும் 
               அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையரின்  ஆசியாகும் !

    6.      காலமும், காட்சிகளும்  என்றும் உலகில் மாறும் 
             கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !

   7.      குடும்பம்  ஒரு கதம்பம், குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் 
            குடும்பத்தை ஆணிவேராய் தாங்குவதும்  தலைவனாகும் !

   8.      வயதில்  சிறியவர்கள் அவர்களிடம்  ஆசிப்பெறட்டும் 
            வயதில் பெரியவர்கள் அவர்களுக்கு  ஆசி வழங்கட்டும் !

  9.     நான்கு எழுத்திற்கு,நான்கும் தெரிந்தவர்கள் என்ற பெயருண்டு 
           ஸ்ரீதரன் , வசுமதி  என்ற பெயருக்கும் நான்கு எழுத்துண்டு !

10.    உற்றாரும், உறவினர்களும், ஒன்றுகூடி  விருந்து உண்ணட்டும் 
        ஆயிரம் பிறை கண்டவரை ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிர்வதிக்கட்டும் ! 

11,   அன்பும் அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை 
         பண்பும்  பயனும் அது,
                                                                                   
                                                             ரா.பார்த்தசாரதி - 8148111951
           

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக