திங்கள், 28 ஜூன், 2021

Kadalmangalam Venugopalan

 



                                      கடல்மங்கலம் வேணுகோபாலஸ்வாமி 

               குழலூதி  கொள்ளைகொள்ளும்  எங்கள்  வேணுகோபாலா 
               எங்கள்  உள்ளதை கொள்ளைகொள்ளும்  வேணுகோபாலா !

               காளிங்க நர்த்தனம் ஆடிடும்  கோபாலா 
               கோவர்தனகிரியை குடையாக பிடித்த கோவிந்தா !

              ஆநிரைகள்  மெய்மறக்க குழலூதிய  வேணுகோபாலா 
               வேணுகானம் இசைத்து  ஆய்ச்சியரை மயக்கிய வேணுகோபாலா !

              தாயாரை தரிசித்து, வேணுகோபாலனை  தரிசிப்போம்
              தரணியில்  நோய் நொடியின்றி வளம்பெற யாசிப்போம் !

              மனிதனை புனிதம்  ஆக்குவது  தெய்வ தரிசனம் 
             மனதில்  சலனம்  போக்குவதும்  தெய்வ தரிசனம் !

             வேண்டியதை வேண்டுவோர்க்கு அளிக்கும் வேணுகோபாலா 
             கடல்மங்கலத்தில், ருக்மணி,சத்யபாமாவாய் காட்சி தரும் வேணுகோபாலா !
           
          
              ரா.பார்த்தசாரதி 
              


     



த்ராத  வினை எல்லாம் தீர்த்திடும்  தெய்வம் !

வரும்துயர், பகையையும், போக்கிடும் தெய்வம்!
வாய்திறந்து, கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !

தாயாரை  தரிசித்து  வேங்கடவனை  தரிசிப்போம் !
தரணியில்  யாவரும் நலம்பெற  யாசிப்போம் !

மனிதனை  புனிதம்  ஆக்குவது தெய்வ தரிசினம் !
மனதில்  சலனம்  போக்குவது தெய்வ தரிசினம் !

திருமலைவாசா  என்று அழைத்தாலே  குறை தீர்க்கும் தெய்வம் !
தினமும்  நினைத்தாலே நல்வழி காட்டும்  தெய்வம் !

கோவிந்தா, கோவிந்தா, என்றாலே  பரவசம் !
கோவிந்தன்  அருளும் கிடைத்திடுமே  நம்வசம் !

என்றும், நினைப்போம், பணிவோம் அவன்தாள் !
எல்லார்க்கும், உகந்த தெய்வம்,  திருமலை தெய்வம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக