சனி, 19 மே, 2018

Paatali Makkal




 பாட்டாளி மக்கள்

நான்கு பேர் சேர்ந்து கல்லை நகர்த்துவது
நம் மனதில் அவன் படும் துன்பத்தை காண்கின்றோம்

மூச்சைப் பிடித்து கல்லை நகர்த்துவதும்  மிக கஷ்டம்
 நான்காம் நெம்பு கோல் கொண்டு நிமிர்த்துவதும் தெரிகின்றதே

அவன் உழைப்பை உறிஞ்ச சமுதாயமும் சற்றே நினைப்பதில்லை
உழைப்பிற்கேற்ற ஊதியமும் அவன் என்றும் பெறுவதில்லை

பாட்டாளி உழைப்பே முதலாளியின் உயர்வு
பணத்தாலே உழைப்பை உறிஞ்சும் ஒரு கூட்டம்

படிப்பு அறிவில்லாத பாட்டாளி என்றும்
நேரம் காலமின்றி கடுமையாக உழைக்கின்ற கூட்டம்

உழைத்தால்தான் ஊதியம்  பெறமுடியும்
உழைப்பாளியின் வேர்வைக்கு என்ன பலன்

படிப்பு அறிவில்லாத பாட்டாளி என்றும்
நேரம் காலமின்றி கடுமையாக உழைக்கின்றான்

படித்தவன்  கணினியில் வேலை செய்து
இரவு பகல் பாராமல் உழைக்கின்றான்.

அறிவுத்திறன் கொண்டு உழைப்பவனுக்கு ஊதியம் அதிகம்
உடல் உழைப்பை கொண்டு உழைப்பவனுக்கோ ஊதியம் குறைவு

இமயமலைப் பனி மலையில் நின்று
அயல்நாட்டு ஊடுருவளை தடுத்து நிறுத்தும்
 பட்டாளத்து பாட்டாளி மக்களையும் நினைவு கொள்ளுங்கள்

நம் பசியை தீர்க்கும்  விவசாயும் ஒரு பாட்டாளிதான்
அவன் அருமை தெரியாமல் நசுக்க முற்படுவதும் அரசுதான் !

உழைக்கும் கரங்களே, உரிமைக்கு குரல் கொடுங்கள்
அடக்குவோரை எதிர்த்து நின்று வெற்றி வாகை  சூடுங்கள் ~


ரா.பார்த்தசாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக