சனி, 19 மே, 2018

பாட்டாளி மக்கள்


பாட்டாளி மக்கள்




பாட்டாளி உழைப்பே முதலாளியின் உயர்வு
பணத்தாலே உழைப்பை உறிஞ்சும் ஒரு கூட்டம்

படிப்பு அறிவில்லாத பாட்டாளி என்றும்
நேரம் காலமின்றி கடுமையாகஉழைக்கின்றான்

நான்கு பேர் சேர்ந்து கல்லை நகர்த்துவது
நம் மனதில் அவன் படும் துன்பத்தை காண்கின்றோம்

மூச்சைப் பிடித்து கல்லை நகர்த்துவதும்  மிக கஷ்டம்
 நான்காம் நெம்பு கோல் கொண்டு நிமிர்த்துவதும் தெரிகின்றதே

அவன் உழைப்பை உறிஞ்ச சமுதாயமும் சற்றே நினைப்பதில்லை
உழைப்பிற்கேற்ற ஊதியமும் அவன் என்றும் பெறுவதில்லை

படித்த கணினியில் வேலை செய்பவும்
இரவு பகல் பாராமல் உழைக்கின்றான்

இமயமலைப் பனி மலையில் நின்று
அயல்நாட்டு ஊடுருவளை தடுத்து
இரவு பகல் பாராமல் உழைக்கும் பட்டாளத்து பாட்டாளி !

எட்டாத தூரமந்த இமயமலை _ அதை
கிட்டால கொண்டுவர தொடர்ந்துஉழை!
பட்டாளத்தார்பணியில்நாட்டின்எல்லை
கெட்டியாயிருப்பதினால்ஏதுதொல்லை!
வெட்டி முறித்தபின்பு கரம் விரித்தால்
கொட்டிக்கிடக்கிறது கமல வண்ணம்!!
சட்டங்களைப்போடுகிற அரசாங்கமும்
சிட்டாயாயுழைப்போரால் பேறுபெரும்!
விட்டாத்திரும்பிடாத நேரங்காலத்தை
முட்டாளாயில்லாமல்செயலாற்றினால்
துட்டு ஏராளம் சம்பாத்தியம் பெற்று
இட்டு நிரப்பிடலாம் இல்லச் சுமையை!!
எட்டும் அறிவினில்ஆணும்பெண்ணும்
கூட்டாயியங்கையிலேவெற்றிபெறலாம்!
காட்டைவெட்டி நிலமாக்கிப்பயிரிடுவோர்!
ராட்டைநூத்துத்தறியாலேநெய்திடுவோர்!
போட்டிபோட்டுத்தொழிற்சாலை தோறும்
ஈட்டுகிற பொருள்களைஅள்ளி வழங்கி
நாட்டுக்குவளம்தரும்தொழிலாளிகள்!!
டாட்டா பிர்லாக்கள் நிறையப் பேர்கள்
பாட்டாளிக்கூட்டத்தால்உருவாகுவார்!!
ஓட்டாண்டி இல்லாத உலகமைப்போம்
வீட்டுக்குவீடுஉழைப்பாலுயர்வோம்!!!
சூட்டிடுவோம்மகிழ்வினைமக்களுக்கே!
==================================
ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
பவானி…ஈரோடு….
9442637264….
==========================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக