ஞாயிறு, 27 மே, 2018

அன்பு உள்ளமே, பொங்கும் எண்ணமே




                                      அன்பு உள்ளமே, பொங்கும் எண்ணமே


கண் எதிரே நிற்கின்றாய், கனிமுகத்தைக்  காட்டுகின்றாய்
என்னை என்னவென்று உன் கண்ணால் கேட்கின்றாய்
மாலையிட்ட  மணாளனை கண்டவுடன்  உனக்கு
மனதிலே பலவற்றை நினைவூட்டும் உனக்கு !

ஆசைக்கு ஒன்று,  ஆஸ்திக்கு  ஒன்று பெற்றோம்
கொஞ்சி மகிழ்ந்திட,  இதுவே நம்முலகம் என்றோம்
வேலைமுடித்து வரும்போது  களைப்பு தீர தாகம் தீர்த்து,
வளைக்  கரங்களில் நீ தரும் நண்ணிரே என் பசி தீரும் !

வேலை  செய்த அன்று, சிரிப்புடன் நடந்ததை பகிர்வேன்
அதனை வேடிக்கையாய் கேட்டு உனக்குள்ளே சிரிப்பாய்
கவலைகள் மறந்து, கதைகள் பேசி இரவினைக் கழித்தோம்
என்றும் நமது உள்ளமே, பொங்கும் பலவண்ணம் அறிந்தோம் !

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் எனச் சொல்வதுண்டு
விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே, வாழ்வு கெட்டுப்போவதில்லை
என்றும் நம்மிடம் பிரிவில்லை வாழ்க்கையில் ஒன்றானபின்னே
ஆனந்தம் இன்று ஆரம்பம், அன்பில் பிணைந்தாலே பேரின்பம்

நான் சின்னப்பெண்  என நினைக்கும் போதினிலே
என் எண்ணம்  என்றும் ஈடேறும் போதினிலே
உன் முகச்சிரிப்பினிலே என்  மனதினிலே
கண்டேன் என் ஆசை மணாளனை நேரினிலே !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக