புதன், 30 மே, 2018

பெண் பிள்ளை



                                                        

                                                      பெண் பிள்ளை 

     பெண் மனம் மகிழ பெண்ணைப் பெற்றாள் 
    ஆண்  மனம் மகிழ்   ஆனைப்  பெற்றாள் 
     ஏனோ உலகில் பாசத்தை பிள்ளைகளிடம் வைத்தான் 
     பெண்ணும், ஆணும் சமம்  என உலகில் உணரவைத்தான் !

    மகளின் பாசம் என்றும் தந்தையிடத்திலே 
    மகனின்  பாசம் என்றும்  தாயினிடத்திலே 
     இதுவே  இன்றைய பாசவலையாய் தொடர்கிறது 
     தாய்தந்தையின்  நேசக்கரங்கள்  உதவுகிறது ! 

     மகளே, உன் பிஞ்சு கால்களால் என்னை உதைக்கின்றாய்  
     என் நெஞ்சத்தையும், இதயத்தையும் நெகிழச்செய்கின்றாய் 
    உன் பிஞ்சு கால்கள் என்  மார்பில் நடனமாடுதே 
     என் உள்ளம் மகிழ்ந்து  திளைக்குதே !

    களைப்புடன் நான் வரும்போது உன் கண் என்னைத் தேடுதே  
    உன்னை தூக்கச் சொல்லி என் கைகளை அழைக்கின்றதே  
    உன் கைகள் சாமரம் வீசி, என் களைப்பினை  நீக்குதே 
   உன் கருவிழிக் கண்கள்  என்னை  அடிமையாக்குதே  !

   உன்னை உயரே தூக்கும்போது சிரித்து என்மேல் உமிழ்கின்றாய் 
   அதனை உமிழ்நீரை அமிர்தமாய் என்மேல்  தெளிக்கின்றாய் 
   உன் தண்டைக் கால்களை என் முகத்தின் மேல் பதிக்கின்றாய் 
   என் வஞ்சிக்க கொடியே, உன் பிஞ்சு காலால் மகிழ்வூட்டுகின்றாய் !

   பெண் மகள்  என்றும் செல்ல மகள்  ஆவாள் 
   திருவிழா காலங்களில் மஹாலக்ஷ்மியாய் உலா வருவாள் 
   தந்தைக்கு  என்றும்  தாதியாய்  இருந்திடுவாள் 
   தரணியிலே  மகளே  என்றும்  போற்றப்படுவாள் !

   

   ரா.பார்த்தசாரதி 

    
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக