செவ்வாய், 16 மே, 2017

நயகராவே நீ ஒரு அருவியா ! நதியா ! நங்கையா !





                             நயகராவே  நீ  ஒரு  அருவியா ! நதியா ! நங்கையா !

                                  .நதியையும்      நங்கையையும்    பற்றி  எழுதாத  கவிஞன் இல்லை  
   நதியினை  காண வரும்  மனிதர்களும்  ஜாதி மதம்   பார்பதில்லை
  இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே
   மனிதன் படைத்த  கவிதை, நதியும், நங்கையும் தானே !   
      
  .
மேகம்  போன்ற மேனியும் ,  இளமைகொண்ட  நங்கைப்போலே 
                                  மலைமேடு, பள்ளம் மூடி, ஓடுகின்றாய்  நாணத்தினாலே!
 
                                                 . நதியே  நீயும்  ஒரு  பெ ண்தானோ ?
                                                  அருவி  எனும்  கூந்தலையும் , எழிலையும் காட்டுவதும்  ஏனோ ?

                                               . நதியே   !  நீ  அருவியாய்  நின்று  புன்முறுவல்   பூக்கின்றாய் 
                                                 நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேன்னருவியாய்  வீழ்கின்றாய் !
               
                                                நதியே  நீ  நடந்தால்  நங்கை !  குனிந்தால்  குமரி யல்லவா !
                                                எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு  தாய் யல்லவா !
      

                                           .    நதியே  நீ  அருவீயாய்  விழுந்து , நதியாய்  ஓடி கடலில் கலக்கின்றாய் 
                                                நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன்  வாழ்வில்  கலக்கின்றாள் !
                      .  நதியே   நீ  உன்  ஓட்டத்தால்  ஒளி  தருகின்றாய்   !
                                               நங்கையோ   வாழ்க்கை எனும் நதியில்  ஓளி  பெறுகிறாள் !


                                            . நதியே   நீ உறவை நாடி கடலில் கலக்கின்றாய்

                                              நங்கையோ , ஓர்  உறவை  தேடி  மனதில் கலக்கின்றாள் !

                      . வெண்ணிற ஆடையணிந்து, வானவில்லை  ஏந்தி நின்றாய் 
                                               நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய் !

                                              ஆம்,  நயகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான் ! 

                                                                                                   ரா. பார்த்தசாரதி  - வில்லிவாக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக