சனி, 13 மே, 2017

சுமைகளும், சுகங்களும்



                                                    சுமைகளும், சுகங்களும்

     மனிதா, வாழ்க்கையை  சுமையானதாய் எண்ணிவிடாதே
     சுகங்களும்  தேடி வரும் என்பதை நீ மறந்துவிடாதே
     குடும்பத்தலைவனுக்கோ  என்றும் வாழ்வில் சுமைதான்
     சுமைகளையும், சுகங்களாக கருதுபவனே சிறந்தவன் !

    நெஞ்சினில் உரம் கொண்டு சுமைகளை  தாங்கிடுவாய்
    சுகமான  சுமைகளும்  உண்டு என்பதை அறிந்திடுவாய்
    மயிலிறகு அதிகமாய் ஏற்றினாலும், அச்சு  முறியும் ,
    மனதில் சுமைகள் அதிகமானாலும் மனம் இறுகும் !

   வீட்டிற்கு முதல்வனே  என்றும்  ஓர்  சுமைதாங்கி
    எல்லா இன்ப, துன்பங்களுக்கும் அவன் ஒரு இடிதாங்கி,
    எல்லாவற்றையும், பொறுமையோடு எதிர் கொள்ளவேண்டும்
   எத்துயர்  வரினும் எதிர்த்து திறம்பட செயலாற்ற வேண்டும் !

  மனித வாழ்க்கையில் காதலும் சுகமாய் பூக்குதே
 அதுவே சிற்சில சமயத்தில்  சுமையாய் தாக்குதே
  சுமைகளும், சுகமும் கலந்ததே மானிட வாழ்க்கை
  இதனை அறியாமல் ஏன்   மாற்றுகிறாய் உன் போக்கை !

   ரா.பார்த்தசாரதி


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக