செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

பொருள் ஒன்று, பயன் வேறு





                                             பொருள் ஒன்று, பயன் வேறு



உலை அரிசிக்கு தெரிவதில்லை - அது
உருமாறி பலரின் பசியாற்றப் போவது!

ஊறும் அரிசிக்கு தெரிவதில்லை - அது
அரைபட்டு பின் அடுப்புக்கு போவது!

அட்சதை அரிசிக்கு தெரிவதில்லை - அது
மங்கலப் பொருளாகி ஆசிர்வதிக்கப் போவது!

வாய்க்கரிசிக்கு தெரிவதில்லை - அது
சந்ததிகள் கையால் சவத்தின் வாய்க்கு போவது!

ரேஷன் அரிசிக்கு தெரிவதில்லை - அது
ஏழை வீட்டில் மட்டுமே உணவாகப் போவது!

அரிசி ஒன்று தான் - ஆனால்,
பயன் வேறு வேறு!

 மலர்கள்  ஒன்று சேர்ந்து   திருமண மாலையாகிறது   
மலர்கள் சிதறி சவ ஊர்வலத்தில் மிதிபட்டு பாழாகிறது !

 மாவிலை தோரணமாகி கல்யாண வீட்டில் தொங்குகிறது 
மாவிலை காய்ந்தால் சருகாகி ,எருவாகி பூமிக்குள் அடங்குது !

தென்னை மரம் சுவையான இளநீர் தந்து தாகம் தீர்க்கிறது 
அதன் ஓலையோ சவத்திற்கு படுக்கையாகிறது !

வாழ்க்கை ஒன்று தான் - அது
வாழ்பவனையும், வாழும் விதத்தையும் பொறுத்தது!

  ரா.பார்த்தசாரதி

தெருவில் பசுமாடு - 123


 படக்  கவிதை போட்டி எண் 123


                                                தெருவில் பசுமாடு - 123

கோமாதா என் குலமாதா  என்று சொல்வதில்தான் பெருமை 
தனியே பசுவினை வீதியில் உணவுக்காக அலையவிடுவது சிறுமை 
நான் பால் கொடுத்தால்தான்  எனக்கு நல்ல உணவு 
பாலை நிறுத்தினால் அலையவிடுவதோ நடைபாதைத் தெருவு !

வயிறுக்காக  கண்டதை தின்று  நான் உயிர்  வாழ்கின்றேன் 
என் உடம்பு பாழானாலும் ஊசிப் போட்டு பால் கறக்கின்றான் 
தவிர, வைக்கோல் கன்றை வைத்தும் ஏமாற்றி பால் கறக்கின்றான் 
ஏனோ, இன்று வரை காப்பாற்றியதற்கு நான் பாலை கொடுத்தேன் !

என் பாலிலும் தண்ணீர் கலந்து,  கலப்படம் செய்து விற்கின்றான் 
 என் முதுமையை உணர்ந்து என்னை தெருவில் அலைய விடுகிறான் 
என் கன்றுகளை சொத்தாக கொடுத்து அவனை மேம்படுத்தினேன் 
என்னை  சொத்தையாக நினைத்து அடிமாடாய் நினைக்கின்றான் !

நம் உயிரையும், உடலையும் வளர்ப்பது தாயும், பசுவுமே 
பால் தரும்வரை அதனை  தெய்வமாய் நினைக்கின்றோம் 
முதிர்ந்த பசுவினை கோசாலையில் விட தோன்றவில்லை
 தாயை முதியோர் இல்லத்திலிருந்து அழைத்துவர மனமில்லை !

பறவைகளும், மிருகங்களும் ஜாதி மதம் பார்ப்பதில்லை,
பணத்தால், ஏழை, பணக்கார ஜாதி தோன்றாமல் இல்லை
தாயாரையும், பசுவினையும் தெய்வமாக  கருதவில்லை 
ஆறறிவிற்கும் , ஐந்தறிவிற்கும் இவ்வுலகில் மதிப்பில்லை !
 

.  ரா.பார்த்தசாரதி
 

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

Kavithai Pookal

Kavithai pookal

நாணம்




                                                                    நாணம் 


        கதிரவனை கண்ட  நாணலே,  நாணத்தால் தலை குனிந்தாயோ 
        காதலனின்  நெருங்கி வருவதை கண்டால் நாணம் கொள்வாயோ 
        இனியவளே ! உன் நாணத்திற்கு  என் நெருக்கம்தான் காரணமோ 
        இரு கைகளைக் கொண்டு மறைத்தால்  நாணம் போய்விடுமோ !

        நாணமெனும்  போர்வைக்குள் உன் உடல் மறைகின்றதோ 
        கருமேக கூட்டத்திற்குள்  பால் நிலா  மறைகின்றதோ 
        நாணமென்பது  பெண்ணிற்கு  ஓர்  அணிகலமானதோ 
        முகத்தை மறைத்தாலும்,கன்னங்கள் சிவந்து வெளிப்படாதோ !   

        நான் விண்ணை பார்க்கும்போது என்னை பார்கின்றாய் 
        நான் உன்னை நோக்கும்போது, குனிந்து காலால் கோலமிடுகின்றாய் 
       உன் நெஞ்சத்திற்குளே  உன் முன் உலா  வருவேன் 
       உன்  கன்னம்  சிவக்க காதல் மொழி பேசிடுவேன் !
     
       நாணம் என்பது  பருவத்தின்  கண்ணாடியோ !
       காதலில் பழகுவதற்கு ஓர் முன்னோடியோ 
      இலைமறை காய்மறைவாய் காதலை  வெளிப்படுத்துமோ 
       பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் கதைகள் பேசிடுமோ !

      நாணமும், அச்சமும்  காதலியின்  உடைமையாகுமே 
      ஒன்று கலந்த நெஞ்சம் உறவை நாடிக்   கெஞ்சுமே 
      நாணத்தால் முகம் சிவந்து காதல் வெளிப்பட்டதே 
      அன்பை நினைத்து ஏங்கி, அமுத நிலையை நாடுதே !

      ரா.பார்த்தசாரதி
     
 
      
       

சனி, 5 ஆகஸ்ட், 2017

சந்தோஷம் என்றும் நம் பக்கம்





          

                       சந்தோஷம் என்றும் நம் பக்கம்


      சந்தோஷம்  என்றும்  நம்  பக்கம்,
.     சந்தோஷம்    என்றாலே மனிதனுக்கு  பாதி  பலம் ,
      அது  இல்லையெனில்  மனிதனுக்கு ஏது  பலம்,
      சந்தோஷம்  நாம்  வாழ்க்கையில் தேடுவது ,
      எப்பவும்  எல்லோர்  நெஞ்சுக்குள் நினைப்பது 
      போதுமென்ற  மனம் இருந்தால் தானே வருவது ! 


  .   சூரியனைக்  கண்டால்  தாமரை
      சந்தோஷத்துடன்  மலர்ந்துதானே பழக்கம்,
       
      கார்முகில்கள்  திரண்டு  வந்து 
      மழை தந்துதான்  பழக்கம்,
                              
      மழையைக்  கண்டால்  மயிலுக்கு 
      மகிழ்ச்சியுடன்  ஆடித்தான்  பழக்கம்,
   .
  .   காட்டில்  உள்ள  குயிலுக்கோ 
      சந்தோஷத்துடன்  கூவிதான்  பழக்கம்.
       
      கிடைத்ததை  மனதிற்கொண்டு  நடப்பவை 
      எல்லாம்  நன்மைக்கே  என  தெளிந்தால் 
      வாழ்வில்  சந்தோஷம்  என்றும் நம் பக்கம்.!
  .

.       ரா. பார்த்தசாரதி

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

ஊர் நினைப்பு





                       ஊர் நினைப்பு 

நான் இல்லாமலேயே  எங்கோ வெகு தூரத்தில் இருக்கிறதே

என் கால் தடம் படாத அந்த சவுக்கு காடும் இருக்கின்றதே 

மழை வராத காலங்களில் மணல் சுடுவதும் தெரிந்ததே 

கடும் வெய்யிலில் எனக்கு நூங்கும், இளநீரும் தாகம்தீர்த்ததே! 

  

.சப்பாத்தி முள்ளில் பெயரெழுதிய அந்த கள்ளிச் செடி வரவேற்றதே 

நான் வளர்த்த தென்னையும்,மாமரமும் காயும்,கனியுமாய் நின்றதே 

ஊர் அம்மன் கோவில் குகை என் குரலை அன்றும் எதிரொலித்ததே

ஏரியும், குளமும் வறண்டு பாலைவனமாய் காட்சி அளித்ததே! 



அன்று மழை பெய்து பயிர்கள் யாவும் பசுமையாய் காணப்பட்டதே 

மழை இன்மையால் உழவு மாடுகளும்,பசுக்களும் காணாமல் போனதே 

விவசாய  நிலங்களும் வீட்டு  மனைகளாக கூறு போடப்பட்டதே

மக்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாய் ஆனதே!



ஏதோ ஒருநாள் குலதெய்வம் வேண்டுதலுக்காக ஊர்  கூடுகின்றதே 

அன்று ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து விழாவிற்கு உதவி செய்கின்றதே
    
யாதும் ஊரே ! யாவரும் கேளிர் என்ற பழமொழி ஞாபகம்  வருகின்றதே 

ஊர் விட்டு, நகரில் வசித்தாலும் ஒரு நாள் ஊர் நினைப்பு   மனதில் தோன்றுதே !


ரா.பார்த்தசாரதி






 

.