ஞாயிறு, 10 மே, 2015

Manavarkal Yean athiga Mark Peruvathillai




                          ஏன் மாணவர்கள் தேர்வில்
                         அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை....?


அது மாணவர்களின் தவறு கிடையாது,
அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை..
வருடத்தில் 365 நாட்கள்
மட்டுமே உள்ளது தான் ஒரு பெரிய
குறை..
உதாரணத்திற்கு ஒரு மாணவனின்
ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோம்..
1.ஒரு வருடத்திற்கு 52 ஞாயிற்றுகிழமைகள்..
மற்ற நாள்கள் 313 (365-52=313)
2.கோடை விடுமுறை 50. ரொம்ப வெப்பமான
காலம் என்பதால் படிப்பது கஸ்டம்.
மீதி 263 நாள்கள் (313-50=263).
3. தினமும் 8 மணி நேரம் தூங்கும் நேரம்
என்பதால்
(கூட்டினால் 122 நாட்கள் வருகிறது).
மீதி 141 நாட்கள் (263-122=141).
4. 1 மணி நேரம் விளையாட்டு நேரம் வளரும்
பசங்களுக்கு நல்லது. நாள் கணக்கு படி 15 நாள்.
மீதி 126 நாட்கள் (141-15=126).
5. 2 மணி நேரம் சாப்பாட்டு நேரம் . நன்றாக
மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படுவதால்
30 நாள்கள்.
மீதி 96 நாட்கள் (126-30=96).
6. 1 மணி நேரம் பேசியே கழிக்கிறோம்.
நிறைய பேசினால் நிறைய கத்துகலாம். 15 நாள்
வருகிறது.
மீதி 81 நாட்கள் (96-15=81).
7. ஒரு வருடத்திற்கு 35 நாட்கள்
தேர்வு எழுதியே கழிப்பதால் , மீதி 46 நாட்கள்
(81-35=46).
8. காலாண்டு,அரையாண்டு, பண்டிகை தினம்
விடுமுறைகள் 40 நாட்கள்..
மீதி 6 நாட்கள்(46-40=6).
9. உடம்பு சரியில்லாமல் எடுக்கும்
விடுப்பு குறைத்தது
3 நாட்கள். மீதி 3 நாட்கள் (6-3=3).
10. சினிமா, உறவினர் திருமணம்,திருவிழானு 2
நாள் போய்விடும். மீதி ஒரு நாள்
(3-2=1).
11. அந்த ஒரு நாளும் அந்த பையன் பிறந்த நாள்..
பின்ன எப்படி தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெறமுடியும்....?
R.Parthasarathy

செவ்வாய், 5 மே, 2015

இன்றைய நிச்சியதார்த்தம்


                                             இன்றைய நிச்சியதார்த்தம் 

தாயும், தந்தையும்  ஜாதகம் பார்த்தார்கள் 
உன்னை எனக்கு  முடிவு செய்ய நினைத்தார்கள், 
ஆம் உன்னை ஸ்கைப்பில் காண விரும்பினேன், 
உன் பெற்றோர் அனுமதியுடன் தொடர்ப்பு கொண்டேன்!  

நான்  கடின உழைப்பால் முன்னேறினேன்,  
பிறர் உதவி கொண்டு முன்னேறமாட்டேன்,
நீயும் என்னைப்போல் இருக்கவேண்டும் என நினைப்பேன்,
 எதையும் தனித்து நின்று சமாளிக்க வேண்டுமென  எதிர்பார்ப்பேன் !

உரையாடும்போது  உன் குடும்ப நிலையை கூறுகின்றாய் 
உன் எதிர்கால படிப்பிக்கும் அடி போடுகின்றாய் 
உன் குடும்பத்திற்கு ஒரு பங்கு அளிக்க வேண்டுகிறாய்,
நீயும் நானும் வாழ்கையில் சரிபாதி என்கிறாய் !

வரும் முன்னே பல எதிர்பார்ப்புக்கள், கட்டளைகள் 
இதற்கெல்லாம்  ஒத்துக்கொண்டால்தான்  திருமணம் 
நிச்சியக்கப்பட்டும்  நின்றுபோன திருமணங்கள்,
எதையும் சாதரணமாக கருதும் இக்கால திருமணங்கள்  !

திருமணம் என்பது சொர்க்கத்தில்  நிச்சய்யக்கபடுகிறதா !
தாய் தந்தையர் பார்த்து  நிச்சயக்கப்படுகிறதா !
ஆண், பெண்  நேரிடை    சந்திப்பில் முடிவாகிறதா !
ஜாதகத்தால்  நல்ல ஜோடிகள் புறகணிக்கபடுகிறதா !

திருமண  வயது வந்தாலே  ஆண், பெண்ணிற்கு பல எண்ணங்கள்
எதையும், பிறர் நிலையில் நின்று நினைக்கும்  மனிதர்கள்  
இரு கைகள் இணைந்தால்தான் வாழ்க்கை என உணரவேண்டும்  
வரதட்சணை இல்லாத திருமணமே சிறந்த திருமணமாக கருதவேண்டும் 

ரா.பார்த்தசாரதி      



   

திங்கள், 4 மே, 2015

தாய்மையின் மகத்துவம்

                                                 தாயும், தாய்மையும் 


 ஆணிற்கு கிடைக்காத  ஓர்  பரிசு 
பெண்ணிற்கு மட்டும் கிடைக்கும் பரிசு 

தன் வயிற்றில் ஒரு உயிரை வளர்கின்றாள் 
கவள உணவையும் குழந்தைக்காக  உண்கின்றாள் !

என்னதான்  விஞ்ஞானம், வசதிகள் வளர்ந்தாலும்,
ஆண்  தன்னைப் பற்றியே  நினைத்திருந்தாலும் ,

பத்து நிமிடங்கள் நின்றாலும் கால் கனத்து வலிக்கும்,
பத்து மாதம் சுமந்தாலும் கருவறைச்சுமை வலிப்பதில்லை !

வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்
இந்த வலியால் மற்றொரு உயிர் வருவதை காண்பார்கள் !

குழந்தை, சிறுமி, குமரி,மனைவி என்கிற பல உறவானதே ,
தாய்மையில்தான்  ஒரு பெண் தன்னிறைவு பெறுகின்றதே !

குழந்தையை கொஞ்சுவது ஆணுக்கும், பெண்ணுக்கும் பேரின்பம்,
குழந்தையை  கட்டி அணைப்பதில்தான் தாய்க்கு தனி இன்பம் !

தாய்மையின் மகத்துவம்,  என்பது பெண்ணின்  பெருமை 
தத்துரூபமாகவும், தத்துவமாகவும் இருப்பதே உண்மை!  


ரா.பார்த்தசாரதி 



    

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

உலக தொழிலாளர் தினம்

                                                உலக தொழிலாளர் தினம்

தொழில் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தொழிலாளியின் பங்குண்டு,
அவர்கள் உரிமைகளையும், நலனையும் காக்க பல சங்கங்கள் உண்டு
தொழிலாளர்களின் நலமும், உரிமையும்,சரிவர காக்கப்படவில்லை ,
அரசாங்கமும், முதலாளிகளும், இதனை சரிவர நிறைவேற்றுவதில்லை !

முதலாளி,  தொழிலாளியை கைப்பொம்மையாக ஆட்டி வைப்பதும்
தொழிலாளியை  அடிமையாக எண்ணும்  எண்ணம்
ஏன் நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம்
இம்மனப்பாங்கே தொழிலாளர்கள் துன்பம்  அடைவது திண்ணம் !

தன் முன்னேற்றமே பெரிதென நினைக்கும் முதலாளி
தொழிலாளர்களை கசக்கிப் பிழியும் தன்மை
ஏனோ தொழிலாளர்களிடத்தில்  ஏற்படும் வன்மை,
இதனால் தொழிலாளி வர்க்கம் அடைவதோ தீமை!

சட்டங்களும், நலச்சங்கங்களும் தொழிலாளியின் நலன் காக்கவே,
அங்கேயும்  அரசியல் நுழைந்து  அவைகளை கெடுக்கவே
காலத்திற்கேற்ப சட்டதிடங்களை தங்கள் விருப்பதிற்காக வலைப்பதுண்டு
இதனால் தொழிலாளர்களும் பாதிப்பு  அடைவதுண்டு !


தொழிலாளர்களின்  சிலை கடற்கரையில் அமைந்ததுள்ளதே
அவர்களின் கண்ணீரோ கடலில் கரைகின்றதே
உரிமைக்கும், நலனுக்கும், நீதி கிடைக்க போராடுவோம்
சபதம் ஏற்போம்    உலக தொழிலாளர்  தினத்தன்று !


ரா.பார்த்தசாரதி





புதன், 15 ஏப்ரல், 2015

ஒரு பேருந்தின் கதறல்






                                                   ஒரு பேருந்தின் கதறல்

                        மூலை  முடுக்கெல்லாம் ஏற்றிச் செல்கின்றேன்
                        ஏழைக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் சிறந்த வாகனம்
                        ஓய்வின்றி எந்நாளும் உங்களுக்கு உதவுகிறேன்
                         மாணவர்களை , இலவசமாக ஏற்றிச்செல்கின்றேன்!


                        நான் சுமக்கும்போது  ஜாதி மதம் பார்ப்பதில்லை
                        தடவழி பலகையும், திருக்குறளையும் சுமக்கின்றேன்
                        நடத்துனரும், ஓட்டுனரும்  என்னை  ஆளுபவர்களே 
                       இடை இடையே ஏறி இறங்கும் பயணிகளும் நண்பர்களே !


                        என் அருமையும், சிறப்பும், பொது மக்களுக்கு தெரிவதில்லை ,
                        பொதுநல  போராட்டத்திற்கும்,மொழி போராட்டத்திலும்
                         உங்கள் நண்பன் என்று நான் கூறிக் கொண்டாலும்
                        கோபம் கொண்டு, உடைக்கவும்,தீயும் வைக்கிறார்கள் !


                        உங்கள் சொத்தினை  நீங்களே  அழிக்கலாமா
                        நான் கதறினாலும், கண்டுகொள்ளாமல் இருக்கலாமா.
                       என்னை உங்கள் நண்பனாய்  கருதுங்கள் 
                        நான் உங்கள் நாட்டின்  சொத்தாக நினையுங்கள் !


                     ரா.பார்த்தசாரதி
                       

 

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

Inrum ulagam maaravillai



                                              இன்றும் உலகம் மாறவில்லை 



     பிள்ளை  பிறந்தால் என்றும் பேரின்பம் 
     குலம் தழைக்க வந்த  திருமகன் 
      பெண் பிறந்தால்  ஏனோ பெருமூச்சு 
      பெற்றோர்கள் வெளிபடுத்தும் ஓர் தனிப்பேச்சு!

     இன்றும் பெண் சிசுவதை நடக்கின்றது 
    இதனை அரங்கேற்றுவதும்  பெண் இனமே,
    குழந்தையும், தெய்வமும்,  ஒன்றுதானே 
    பெண் குழந்தைகளை புறக்கணிப்பதும் ஏனோ?

    தன்னைப் போல் பிறரையும்  நினை 
     ஆண் , பெண் பாகுபாடின்றி  நினை 
    பெண்ணே  உன் வீட்டின் செல்வம்,
    உன் குடும்பத்தில் அவளொரு பல்கலைகழகம்  !

    பெண்ணை  ஆணுக்கு நிகர் என நினை,
    தங்கமென  தன்  பெண்ணை வளர்த்தான் 
    தங்கத்தை திருமண பந்தத்தில் தொலைத்தான் 
    பிறந்த வீடு விட்டு, புகுந்தவீடு புகுந்தாள்!

    பிரித்து, பாகுபடுத்தும் பெண்ணின் வாழ்க்கை,
    எதிர்காலம், எப்படியோ என் நினைக்கும் வாழ்க்கை,
   தன்னலம்மின்றி  பிறர் நலனுக்காக புகுந்தாள் 
   தன்  முன்னேற்றத்தை காணத் துடித்தாள் !

   பிறந்த வீட்டில் கொடிகட்டிப்   பிறந்தாள்,
   இன்று கொம்பைச் சுற்றிப் படரும் கொடியானாள்,
  இன்று உரிமைக்காக சிலவற்றை விட்டுகொடுக்கிறாள்
  விட்டுகொடுக்கும் வாழ்கையே உயர்வென நினைக்கிறாள் !

 பிள்ளை வீட்டில் பிச்சை எடுக்கும்  பெற்றோர் 
 பெண் வீட்டில் மரியாதையாக நடத்தப் பட்டாலும் 
 பழமை பேசி, தன்னுக்குள் போட்டுக்கொண்ட வேலி ,
 என்று மாறுமோ இந்த தேவையற்ற வேலி !

மருமகனை, மகனாக நினைக்கத் தெரிந்தாலும்,
மருமகளை, மகளாக நினைக்கத் தெரிந்தாலும்,
பழமை நீக்கி, காலத்திற்கேற்ப வாழத் தெரிந்தாலும்,
பெண்ணே ! இன்றும் உலகம் மாறவில்லை !


ரா.பார்த்தசாரதி