செவ்வாய், 27 செப்டம்பர், 2016

கடலோரக் கவிதை



                                                          கடலோரக் கவிதை

     நேரமும் அலையும்  மனிதனுக்காக  காத்திருக்காது 
     கடந்த காலமும், எய்த அம்பும் திரும்ப பெற  முடியாது
     ஆசையே அலைபோலே, எனப் பாடினான்  கவிஞ்ன்,
     அலையும் ஆசையும்  செயலில் ஒன்றே என்றான் !

     கடலைப்  பார்த்தாலே, நெஞ்சினிலே எண்ண அலைகள் தோன்றிடுமே 
     காதலியின் முத்துச்சிரிப்பினை அலையென மனம் நினைத்திடுமே ,
     முத்துசிரிப்பும், புன்னகையும்,வெண்ணிற அலையில் தோன்றிடுமே,
     காதலி என்னை வருடியதுபோல் கடல் அலையும்   அழைக்குமே !

     கடலோர காற்றும்,சூழலும், கவிதை எழுதத்  தோன்றும் 
     கவிஞனின் எண்ணங்கள் என்றும் சிறகடித்து பறக்கும் 
     கடல் அலைகள் கண்டு மனம் என்றும் பொங்கி எழும் 
     அவன் எழுதும் கவிதைக்கு தென்றல் வாழ்த்துப் பாடும் !

     கடலோர கவிதைக்கு என்றும் சிறப்புண்டு 
     கடல் அலை அருகினில் மக்கள் செல்வதுண்டு 
     மகிழ்ச்சியுடன் கடல் அலையில் கால்களை நனைப்பதுண்டு 
     கால் தடத்தில் மண்  பெயர்ந்து தடம் பதிப்பதுண்டு !

     நிலவும், மேகமும் ஒன்றையொன்று தழுவும்  காட்சி ,
     கடல் அலைகளுக்கு இதனை காண்பதே  மகிழ்ச்சி 
     கடற்கரையே  காதலர்களுக்கு  ஓர்  சொந்த வீடு 
     தனியே கொஞ்சு மொழி பேசிட, அங்கில்லை கட்டுப்பாடு !


         ரா.பார்த்தசாரதி

        

     
     

    
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக