வியாழன், 22 செப்டம்பர், 2016

நீதியைத் தேடி

                                                            

                                                                    நீதியைத் தேடி


                                        குற்றங்கடிதல்  எழுதிய  வள்ளுவன்
                                        நீதியை தேடி  எழுதவில்லை அன்று !

                                        ஆணுக்கு ஓர் நீதி, பெண்ணுக்கொரு நீதியா !
                                        ஏன் என்று கேட்க தெரியவில்லையா ?

                                        சட்டத்தின் முன் எல்லோரும் சமம்
                                        நீதியை பாகுபடுத்தி பார்ப்பது எங்ஙனம் ?

                                        நடுநிலைமையுடன்  நீதி வழங்க வேண்டும்
                                        நீயத்திற்கும், மனசாட்சியுடனும் நடக்க வேண்டும் ,

                                        இன்று நீதிக்கே அநீதி  இழைக்கப்படுகிறதே !
                                        பணத்தினால் சாட்சிகள் மறைக்கப்படுகிறதே !
                                          
                                       பணமிருந்தால் நீதியைக்கூட அடிமைபடுத்தமுடியும்
                                       செய்யாத தவறுக்கு ஏழையை கூட சிறைபடுத்த  முடியும் !

                                      அவனியில் ஏழைக்கு  ஓர்  நீதியா
                                       பணம் படைத்தவனுக்கு ஓர்  நீதியா !

                                      நீதி  பணத்தால் தன்மானம்  இழக்கின்றது
                                      ஏழைக்கு  எட்டா  கனியாகிறது !
                        
                                      நீதியை  உண்மையாக்கினான் மனுநீதி சோழன்
                                      உண்மையை  விலை பேசினான் இன்றைய நீதியரசன் !

                                      நீதி பணத்தால்  மௌனம் சாதிக்கின்றது ,
                                     மனுநீதி சோழனும் நீதியை தேடியே இறந்தான்  


                                       ரா.பார்த்தசாரதி
                                        
                                         
 
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக