வெள்ளி, 5 ஜூன், 2015

Ayal Naatu Mogam


Ayal Naatu Mogam
வாசல் வரை வந்த
துன்பமெல்லாம் வழியனுப்ப
வான்பறவை மேலேறி
அயல்தேசம் காணப்
பணங்கட்டிப் படியேற
விடை கொடுக்கும் நிலையம்
விமான நிலையம்…!

புதிய தேசம் போனதும்
புதிரான மனிதர்கள்…
இவர் மொழிதனைப் பயின்று
குணந்தனை உணர்ந்து
கொடுத்திடும் தொழிலைக்
கண்விழித்துச் செய்திட
உறுதிகொண்டு நுழைபவன்
சாதிப்பது நிச்சயம்…!

அன்பான அன்னையின்
அரவணைப்பும் இல்லை
ஆசை மனைவியின்
தலைகோதலும் இல்லை
பெற்றெடுத்த மக்களின்
ஸ்பரிசமும் இல்லை
ஓடிவந்து உதவும் உயிர்
நண்பனும் இல்லை..!

அன்னமில்லை ஆகாரமில்லை
அன்புக்கு யாருமில்லை
பண்டிகைக் கொண்டாட்டமில்லை
விடுமுறை நாட்களில்லை
உணர்வுகள் அத்தனையும்
வெறுமையாய் மாற்றிக்கொண்டு
வேதனை நிலை வெளிக்காட்டாது
இயற்கையோடு இயந்திரமாய்
வெளிநாட்டில்  நாம்…!

பணமிருக்கும் நாட்டிலே
நல்ல மனதிற்கிடமில்லை
குணமிருக்கும் தாய்நாட்டில்
பணத்திற்கு வழியில்லை
வாழ்க்கையெனும் ஓடத்திலே
வந்தொட்டும் தடைகளாய்
வந்ததெல்லாம் ஏற்றுக்கொண்டு
வாழ்கின்றோம் மனிதர்களாய்…!!
கலையெலாம் நன்கு கற்றுக்
காரியம் வெளிநாட்    டில்தான்
நிலைபெற வாழல்’ என்னும்
நினைப்பினைப்  பெற்றோர் பிள்ளை
தலையிலே பதிக்கின்  றாரே!
தமிழதற்(கு) உதவா தென்றும்
கலைமகள்  ஒதுக்கி வைத்துக்
காசினைப் பூசிப் பாரே!
=====================================================================================
உற்றது பிறரும் பார்க்க
உயர்ந்ததாய் வேண்டு மென்றே
கற்றதின் மேலே வைத்த
காதலா இந்தப் போக்கு?
மற்றைய நாடு சென்று
மங்காத செல்வம் சேர்க்கப்
பெற்றவர் தமக்குள் கொண்ட
பித்தமே இந்த நோக்கு!
‘இதந்தரும் தமிழைக் கற்றால்
என்வரும்? இங்குள் ளோர்போல்
பதர்களாய்  மடிவ  தற்கோ?
பணந்தரும் வெளிநா  டெ’ன்றே
விதந்துரை செய்து பிள்ளை
வெளிநாடு செல்ல வைத்து
நிதமவர் நினைப்பில் ஏங்கி
நிம்மதி இழக்கின்  றாரே!
மதங்களைப் போல இன்று
மற்றொரு நாடு சென்று
விதவித மான இன்பம்
விரும்பிடு கின்ற  ஆசைச்
சிதைவளர்க் கின்றார்! தங்கள்
சிறுவரைப் பலிகொ டுப்பார்!
புதைகுழிக் குள்ளே போகும்
புத்தியில் தெளிகி லாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக