சனி, 13 ஜூன், 2015

அயல் நாட்டு மோகம்



                                                    அயல் நாட்டு மோகம் 

வானுர்தி மேலேறி  அயல்நாட்டு வாசம் 
புதிய தேசம், புதிய மனிதர்களின் நேசம் 
மொழி, குணம் உணர்ந்து செயல்பட வேண்டுமே 
உறுதிகொண்டு கண்விழித்து உழைக்க வேண்டுமே !

அங்கே அன்னையின்  அரவணைப்பு இல்லை 
ஆசை மனைவியின் இன்முகம் காண்பதில்லை 
பெற்ற மகன்,மகளின் ஸ்பரிசம் இல்லை 
அன்புடன் உறவாடும் நண்பனும் இல்லை !

அன்னமில்லை, நேரத்திற்கு நமக்கு ஆகாரம்மில்லை 
பண்டிகை இல்லை, அன்புகாட்ட  யாரும்மில்லை 
உணர்வுகள் வெறுமையுடன்  மாறிவரும் நிலை,
வேதனையும், துன்பத்தையும்,வெளிக்காட்டத நிலை !

பணம்மிருக்கும் நாட்டில், நல்ல மனதிர்க்கு இடமில்லை 
குணமிருக்கும் நாட்டில் பணத்திற்கு வழிஇல்லை 
வாழ்க்கை எனும் ஓடத்தில் வந்து சேரும் தடைகள் 
வந்தனவற்றை ஏற்றுக்கொள்ளும் இக்கால மனிதர்கள் !

கல்வி, கலைகள் எல்லாம் நன்கு கற்றோம்
வேலை கிடைத்து  வெளிநாட்டில் நன்கு உழைக்கின்றோம்
காரணம், இவை எல்லாம் பெற்றோரின்  ஆசையே
கலைமகளை, ஒதுக்கி, காசினைப் பூஜிக்கின்றாயே !

பணத்திற்காக  வெளிநாடு  விரைந்து  சென்றாய்
பெற்றோர்களை நினைந்து நிம்மதி இழக்கின்றாய்
நம் நாட்டு  உணவின் சுவையை  மறந்தாய்
மேல்நாட்டு உணவிற்கு மயங்கி அடிமைப்பட்டாய் !

வெளிநாட்டில் இருக்கும்போது நம் நாட்டின் அருமை தெரியும்
பண்பு, கலாச்சாரம் இவற்றின் மதிப்பு தெரியும் 
பணத்திற்காக பிள்ளைகளை அனுப்புகிறோம் என அறிவோம்
 அறிவாளிகள் வெளியேற்றம் என்பதை நாமே நடத்துகின்றோம் !

பிள்ளைகளை பணத்திற்காக புதைகுழியில் தள்ளுகின்றோம்
பாசத்தையும், அன்பையும், தள்ளிவைத்து துயரப்படுகின்றோம்
பிள்ளைகளின் அறிவை அடமானம் வைக்கின்றோம்
தாய்நாட்டின்  வளர்ச்சியை   தடை செய்கின்றோம் !

பணம் எட்டி பார்க்கும் , பாசம் பக்கத்தில் இருக்காதே  
பணத்திற்காக ஆசைப்பட்டு,உறவுகள் துரத்தபடுகிறதே   
தவறினை உணர்கின்ற நேரத்தில் காலங்கள் கழிக்கப்படுகிறதே
எண்ணியே வாழ்க்கை  இருதலை கொல்லியாய் இருக்கிறதே!

என்றும்     காலங்கள்   மாறி,  தன்னிறைவு  பெற்றாலும் 
பணம் இருந்தாலும், வசதிகள்  இருந்தாலும் 
மனம் பாசத்திற்காக  ஏங்கும்  காலமாய் இருந்தாலும் ,
என்று மாறுமோ  இந்த அயல் நாட்டு  மோகம் ! 

ரா.பார்த்தசாரதி 


  







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக