வியாழன், 11 ஜூன், 2015

ரேகா திருமண வாழ்த்து மடல்



                                   திருமண வாழ்த்து மடல்                           .

மணமகள்: ஆர் . ரேக்கா                              இடம்: வசந்தம் கல்யாண மண்டபம் 
மணமகன்: எம். சாய்கணேஷ்                   ஆரிய கௌடா ரோட்      
                                                                                    தேதி :    12-06-2015 


1. இன்று , வசந்தம் கல்யாண மண்டபத்தில் ஓர் கல்யாண மேடை,
    இன்னாருக்கு  இன்னார், என்று  எழுதிவைத்த  கல்யாண மேடை,

2. இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  விழா ,
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. திருமணம் என்றாலே உற்றார், உறவினர்  ஆசியே 
    அகிலத்தில் சிறந்தது தாய்,தந்தையர்  ஆசியே !

4. காதலை முடித்து, திருமணத்தை எதிர்நோக்கும் சாய் கணேஷ்  எனும்    
                                                                                                                                           ஆடவனே
   என்றும்  சென்னையில்  வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே!

5. காதல் என்பது எது வரை? திருமணத்தில் முடியும் வரை,
    திருமணம் என்பது எது வரை? இருமனம் ஓன்றாகி இல்வாழ்கை      
                                                                                                                         நடத்திடும்  வரை! 

6.  திருமதி என்பது  ஒரு வெகுமதி என்று சொல்வது வழக்கம் 
     திருமதியின் பெயரோ ரேக்கா என்று சொல்வது பழக்கம்   !

7.  காலங்களும், கோலங்களும், என்றும்  மாறும் 
     கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும்!

8.மலர்போன்று  மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

9.  பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
     புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

10.கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
    அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !
  
11. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

12. வேற்றுமையில்  ஒற்றுமை கண்டு,  விருந்துண்டோம், 
      மணமக்கள் வாழ்வில் வளம்பெற  வாழ்த்துவோம்!

13. அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
      பண்பும், பயனும்  அது.   என்பது  வள்ளுவர் வாக்கு. 

      ரா.பார்த்தசாரதி . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக