செவ்வாய், 26 மே, 2015

முதுமை




                                           முதுமை 

முதுமை என்பதே மனிதனின் அனுபவ முதிர்ச்சி
உடலும் உள்ளமும் சற்றே  அடையும் தளர்ச்சி
துணை  தடுமாறினாலும் மனம் கொள்ளும் எழுச்சி
வீ ழ்ந்தாலும்  கைகொடுத்து தூக்கிவிடும் முயற்சி !

அனுபவத்திற்கும், வயதிற்கும், மதிப்பு  இல்லை
பெற்றதும்  உடன்பிறந்ததும் உதவ நினைப்பதில்லை,
ஏனோ கடனுக்காக  உதவும் நிலைமை  இக்காலத்திலே
உள்ளத்தில் கலங்கும் முதுமைக்கு நிம்மதி எக்காலத்திலே ?

அடிபட்டு, இடம் தேடித், தட்டிதடும்மாறும் நெஞ்சங்கள்
பாசத்தினால் விடுபட முடியாத  முதியோரின்  எண்ணங்கள்
இளம் ஜோடிகள் போல் காதலும், காமமும்  இல்லை
முதிர்ந்த காதல்தான், ஆனால்  காமம் இங்கில்லை  !

முதுமை காதல் என்பது தாஜ் மஹாலின்  நினைவு
இளமைக் காதல் என்பது மனக் கோட்டையின் வளைவு !
இன்று  முதுமையின் அடைக்கலம் முதியோர் இல்லங்கள்
இதனை  மாற்றாதோ  இளமையின்  எண்ணங்கள் !

தனக்காக  வாழாது  பிறருக்காக வாழும்  முதுமை
என்றும் உறவுக்கும், பாசத்திற்கும் ஏங்கும் தனிமை
இளமையின்  முதிர்ச்சியே  மனித இனத்தின்  முதுமை
தன் வினை தன்னைச் சுடும் என்பதுதான் பொதுஉடைமை !

முதுமையை இளமையாக்கி நெஞ்சுரத்துடன் நடைபோடுங்கள்
நட்பையும், உறவையும் என்றும் தவிர்த்து விடாதீர்கள்
நடைப்பயிற்சியும், யோகாவும் செய்து  உடலை பேணுங்கள்
எங்கே சென்றிடும் காலம் நம்மை, வாழ்விக்கும் என எண்ணுங்கள் !


ரா.பார்த்தசாரதி

.


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக