செவ்வாய், 31 மார்ச், 2015

மாடு மேய்க்கும் பெண்ணே


 மாடு  மேய்க்கும் பெண்ணே

ஒத்தையடிப்  பாதையில்  கொம்புடன் செல்கின்றேன்
என் பசு மாட்டை மேய்ப்பதற்கு கூடச் செல்கின்றேன்
என் பிழைப்பே  இந்த பசுமாட்டின்   வளர்ச்சி
என் வாழ்வில் என்றும் எனக்கில்லை தளர்ச்சி !
காய்ந்த மண்ணும், மேடும் தாண்டி
காட்டிற்கு  ஓட்டிச்  செல்கின்றேன் என் பசுவை
கன்றை விட்டு பசுவை  மேய்கின்றேன்
என் மகனை விட்டு  தனிமையில் ஏங்குகின்றேன் 
பசு மேய்ந்தாலும்  தன் கன்றை மறப்பதில்லை
மகன் தாயை விட்டுப் பிரிந்தாலும், தாய் மறப்பதில்லை
பசுவையும், கன்றையும்  என் வீட்டில் வளர்கின்றேன்
இரண்டையும் என் மகன்போல் வளர்க்கின்றேன் !
வளர்க்கும்போது  எந்த உறவும் சிறிது காலமே நிலைக்கும்,
பறவையும், பறக்க தெரிந்ததும், கூட்டை விட்டு விலகும்
பசு தன்  உணவை  மெல்ல அசைபோடும்
நீயோ , உன் வாழ்வின் அனுபவத்தை  அசைபோடுகிறாய் !
ரா.பார்த்தசாரதி 

வியாழன், 26 மார்ச், 2015

ராமன் எத்தனை ராமனடி



                                             ராமன் எத்தனை  ராமனடி 

     ராமன் பிறந்ததும்  நவமியிலே 
    கிருஷ்ணன் பிறந்ததும் அஷ்டமியிலே ,
    இரண்டும் கடவுளின் அவதாரங்களே 
    இராமாயணம், மகாபாரதத்தின் நடுநிலை  நாயகர்களே !

   ராமானயத்தின், காவியத் தலைவன் ராமனே 
  பிறன்மனை நோக்குபவனை தண்டித்தவனும் ராமனே 
   நட்புக்கு இலக்கணமாய்  இருந்தவனும்  ராமனே 
   ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவனும் ராமனே !

  ராம நாமமே  நலம் தரும் நாமமே ,
  அனுதினம் சொன்னாலே நன்மை அடைவதும் திண்ணமே !
  யாவருக்கும்  நன்மை அளிக்கும்  நாமமே 
 ஈசன் வாயுரைத்த சிறப்புமிக்க நாமமே !

புனர்பூசம்  நக்ஷத்திரத்தை  ராமனின்  பிறந்த நாளாக கொண்டாடுவோமே 
 பானகமும், சுண்டலும், பருப்பும், மோரும் நிவேதனமே 
ராமன் எத்தனை  ராமனாய்  இருந்தாலும் ,அவரது குணம் சிறந்ததே, 
அதிலும் அவரது  கல்யாணகுணங்கள் மிகவும் சிறப்புடையதே !

ரா.பார்த்தசாரதி  
  

சனி, 14 மார்ச், 2015

தோஷங்கள் நீக்கும் பரிகாரம்




                                               தோஷங்கள்  நீக்கும்  பரிகாரம்


   பச்சரிசி,  தேங்காய் துருவல்,   வாழைப்பழம், இந்த மூன்றையும், 

   ஒன்றாகச்  சேர்த்து பிசைந்து, புற்றுபோல் செய்து, கோவிலில், 

    நாகாத்தம்மன் சிலை  முன்போ  அல்லது புற்றின் முன்பாகவோ 

     வைத்து,   புற்றுக்கு  சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து 

    வணங்கினால் கிரக தோஷங்கள், கண் திருஷ்டியால் தடைப்படும்

    காரியங்கள் எல்லாம் தடையில்லாமல்  நடக்கும். 


    ரா.பார்த்தசாரதி 

வெள்ளி, 13 மார்ச், 2015

Kaadali





                          காதலி,   தன் கணவனுக்கு எழுதிய கடிதம் 

                                    நட்போடு  நான்  உன்னை
                                            நெடு நாட்கள்   பார்த்திட 
                                   காதலோடு    நீ  என்னை 
                                             கணப்பொழுதும் பார்க்க 
                                   கண்டு கொண்டேன்   உந்தன் 
                                             காதலின்  ஆழத்தை 
                                    கைபிடிக்க  இன்று மனதார வருகிறேன் 
                                             காதலியாய்  உன்னை காண !

                                 

ஞாயிறு, 8 மார்ச், 2015

வல்லமை


வல்லமை


திருமதி  பவழசங்கரி ,

நீங்கள் எழுதிய உலக மகளிர் தின  கட்டுரை  மிகவும் அருமை.


ரா. பார்த்தசாரதி