புதன், 30 ஜூலை, 2014

இருபத்தி நான்கு மணி நேரம்



                                                இருபத்தி நான்கு மணி நேரம்

இருபத்திநான்கு மணி நேரம், ஆஸ்பத்திரி , ஏ டி எம் , மெடிக்கல் ஷாப்,
இவை எல்லாம் அதிசயம் இல்லை. ஆனால் அமெரிக்காவில் பார்க்கின் 
என்பதே ரொம்ப கஷ்டம். ஒரு முறை  பீட்டர் என்கிற   83 வயது முதியவர் தனது காரில் இரண்டு புள்ளி நான்கு நேரம் பார்கின்காக சுற்றி கடைசியில் காரை பார்க் செய்தார். செக்யூரிட்டி;யிடம்  போய் தான் கஷ்டபடத்தை சொன்னார். தப்பாக புரிந்து கொண்டு தலைமை அதிகாரியிடம் சொல்ல, உடனே அவர் CNN TV க்கு போன் அவர்கள் உடனே பீட்டரை பேட்டி .காண வந்தனர். டிவி ரிபோர்ட்டர் எப்படி நீங்க 24 மணி நேரம் பர்க்கிங்க்காக சுற்றினீர்கள் இது பெரிய சாதனை இதை கின்னஸ் ரெகார்டில் போடபோகிறோம் என்றனர் . பீட்டர் க்கு ஒன்றும் புரியவில்லை.  டிவி ரிபோர்ட்டரிடம் சார்  இரண்டு புள்ளி நான்கு மணிநேரம் 
சுற்றி பின் பார்க்கின் செய்தேன் .  தவறுதலாக  இருபத்துநான்கு மணி நேரம் 
புரிந்து கொண்டது என் தவறில்லை. ரிப்போர்ட்டரும், தலைமை அதிகாரியும் 
அசடு வழிந்தார்கள் .

ரா.பார்த்தசாரதி

செவ்வாய், 29 ஜூலை, 2014

இப் படியும் ஏமாற்றுவாளா




                                                 இப் படியும்   ஏமாற்றுவாளா    

     நளினி எப்பொழுதும் எந்த கலர் புடவையில்சென்றாளோ  அதே  கலர்

    புடவையுடன் திரும்புவாள் .எல்லா சேல்ஸ் மேனும் அவள் 

    கையாள் . வரும்போது சலவை புடவையுடன் வருவாள் ..

    புது புடவையை எடுப்பாள் . அலங்கார அறைக்குள் சென்று

    உடுத்திய புடவையை அழகாக மடிப்பாள்  விலை லேபிளை 

    ஒட்டிவிட்டு,  புது புடவையை  உடுத்துவாள்.  அக்கடை

     ஆட்களை வைத்தே  உடுத்தியதை கலைக்கப்பட்ட புடவை
 
   குவியலில்  கலந்திடுவாள்..  காமேராக்களும் பார்த்துக்கொண்டு

  இருந்தன.

 



















வாங்கி கொண்டு சென்றிடுவாள்.  கடையின் காமெராக்களும்
 

திங்கள், 28 ஜூலை, 2014

அந்தரங்கம்



                                                                 அந்தரங்கம்

திருமணம் முடிந்து ஒரு வருடம் நெருங்கிற்று.  சுரேஷுக்கு அவசரம்.  

அன்று இரவு சுமதியிடம் இன்னிக்காவது காட்டுவாயா, இல்லையா? , 

என்னஅவசரம்? பொறு சுரேஷ் .   ஏமாற்றாதே சுமதி என்றான்.  அருகில் 

சென்று  ஓர் முத்தம். இன்னிக்கு இது போதும்.  நாளை காட்றேன். மறுநாள் 

இரவு சுமதி கதவை  மூடினாள்.  மிக நெருக்கமாக அமர்ந்தாள்,  திறந்து 

காட்டினாள் அவர்களின், திருமண புகைப்படங்களை. அன்று அவர்களின் 

திருமணநாள்..


ரா. பார்த்தசாரதி

ஈமெயில் காதல்




                                                          ஈ-​மெயில் காதல்

     சுமதியும், சுரேஷும்  ஒரே தெருவில் வசிப்பவர்கள் இருவரும் . வெவ்வேறு 
    
     கல்லூரி . அவர்களின்  சந்திப்பே பஸ்சில்தான். தினம்   இருவருமே 

    ஈமெயில் மூலமே தொடர்பு கொண்டு, அவர்களுடைய  சந்தேகங்களை

     தீர்த்துக்கொள்வர்.   நாளடைவில் ஈமெயில் நட்பே காதலில் முடிந்தது. 
    .
     சுரேஷ் படிப்பை முடித்து அயல்நாட்டு வங்கியில்  சேர்ந்தான்.
     
      அவன்   சம்மதம் பெற அன்புடன் அனுப்பிய வார்த்தைகள். 
 
   Ennodu-Mattum Anbudan Iniya   Life-ல்
   
    இணைவாயா ! 
-------------------------------------------------------------------------------


   ரா. பார்த்தசாரதி
        


                 
                
            .

சனி, 26 ஜூலை, 2014

பைத்தியத்திற்கு சிபாரிசு


                                            

          
                                                     பைத்தியத்திற்கு சிபாரிசு

          ரவி ரயில் டிக்கெட்டுக்காக  நின்றவன், . பத்து நிமிடம் ஆகியும்
          நகரவில்லை. முதலில் நின்றவன், பைத்தியம்  டிக்கெட் கொடு,
          என்று பல  தடவை கேட்டும் அவர் மறுத்தார்..

          ரவியும், நின்றிருந்தவர்களும்  கிளார்க்கை அறிவில்லாதவன்,
          முட்டாள் என  கூறினார்கள் கிளார்க்  கோபத்துடன்  வெளியே வந்து,
          முதலில் நின்றவனை  பார்த்து  கிண்டியில் நின்றுகொண்டு, 
          கிண்டிக்கு டிக்கெட் கேட்பது  முட்டாள்தனமாக இல்ல  ?
          முட்டாள், நான் அல்ல  நீங்கதான்.என்றதும்,  திட்டியவர்கள்
          வாய்யடைத்து நின்றனர்.
.   


           ரா. பார்த்தசாரதி
             
           

             


திங்கள், 21 ஜூலை, 2014

ஒரு தாயின் தவிப்பு






                                                    ஒரு தாயின் தவிப்பு

நீ அயல்நாடு  சென்றாய் ! கடந்தன இருபது வருடங்கள் !

நான் வளர்த்தேன், வீட்டின் பின்புறம் தென்னை, வாழை !
இன்று அவைகள் உயர்ந்து  வளர்ந்து விட்டது !
இவைகள் என் பசியையும்,  தாகத்தையும்   தணிக்கிறது!

தினமும் இன்டர்நெட் மையத்திற்கு செல்வேன் !
உன்னை ஸ்கைப்பில் காண ! உன் இரு வரி ஈமெயில்தான் பார்க்கமுடிந்தது !
பல நாள் ஈமெயில் தகவல் இல்லாமல் திரும்பியுள்ளேன் !
மனமும், உள்ளமும் சோர்ந்து  தவிக்கின்றேன் !

என்று உன்னை ஸ்கைப்பில்  காண்பேனோ 1
உன் நிலமைகண்டு நான் தவிக்கின்றேன்,
ஏனோ, நீ அடிமைப்பட்டு அங்கே தவிக்கின்றாய் !
நான் பச்சை தென்னை ஓலையில்  படுக்கும் முன்னே,
என் உடம்பை  ஈக்கள் மொய்க்கும்  முன்னே,
உனது  ஈமெயில், ஸ்கைப்பும் எனது உடலைக் காட்டும்மா !
நான் தெரிந்துகொண்டது, பணம் எட்டிப்பார்க்கும்,
பாசம், உறவு  இவைகள்  தொலைவில் நிற்கும் !



ரா.பார்த்தசாரதி