ஞாயிறு, 1 ஜனவரி, 2023

Puththande ottrumai Malaratho


புத்தாண்டே ஒற்றுமை மலராதோ !!              

புலரும் பொழுதாய்
புத்தொளி பரப்பும்

புத்தாண்டே !

பூமியெங்கும்
அமைதி மட்டும்

ஆட்சி புரியாதோ

புத்தாண்டே
!

நாட்டுக்கு, நாடு சமாதானம் 
தானமாய் கிடைக்காதோ 
மக்கள் இறப்பினை 
சற்றே நினைக்காதோ !
புத்தாண்டே !

மண்ணில் விழும் மழைத்துளியும்
விண்ணில் வீசும் 
காற்றும் 
யாவருக்கும் பொதுதானே
புத்தாண்டே
!


*நதியால் இணைந்த
மாநில மக்கள், 
அணையால் 
பிரியும் அவலமும் அமிழ்ந்து போகாதோ
புத்தாண்டே
!

நம்பிக்கை துரோகமும் 
நயனவஞ்சகமும் கூடஇருந்தே  குழி
பறிக்கும்  கூட்டங்களின் 
எண்ணங்கள் மாறாதோ                           
புத்தாண்டே!

வெள்ளத்தால் சேதமுற்ற 
பயிருக்கும், வீடு, வாசல் 
இழந்தோர்க்கும் ஆவண 
அரசு செய்யாதா  புத்தாண்டே!

இந்திய நாடே , வேற்றுமையில் ஒற்றுமை உணர்ந்து 
சுயநலங்களும் சூழ்ச்சிகளும்
சுவடு தெரியாமல் மறைந்து,

மனித நேயம் மலரட்டும் 
புத்தாண்டே !!
 ரா.பார்த்தசாரதி  - D 103  8149111951

 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக