வியாழன், 26 ஜனவரி, 2023

kudiyarasu 2023

 

                                                   

                                                          இந்தியக் குடியரசு 

              இந்திய குடியரசின் 74 ஆம் ஆண்டினை கொண்டாடுகிறோம் 
             ஆங்கிலேயர்களிடமிருந்து  அஹிம்சை என்னும் அறவழியில
             வெற்றி வாகை சூடியதால் இக்குடியரசு தினத்தை நாம் 
             கொண்டாடுகிறோம் 
              உடல்களை வருத்தி தாயகத்திற்கு  தன உயிரை 
             அர்ப்பணித்த  வீரர்களின் தினம்
              தன சுகங்களையெல்லாம்  தூக்கி எறிந்த தியாகிகளின் 
             தியாக   தினம் 
             எந்த நோக்கத்தில் நமக்காக சுதந்திரத்தை வாங்கி 
              தந்தார்களோ அதை கண்ணியத்துடன் காப்பது 
              நம் கடமையன்றோ ?
             இன்றைய  நிலை என்ன !
            நாட்டுக்கு நாடு சமாதானம் தானமாய் கிடைக்காதா ?
            நம்பிக்கை இன்மையும்  நயவஞ்சகமும் கலந்த ஆட்சி 
             மாறாதா   இக்குடியரசு நாட்டில் !
            இந்தியர்  பல நாடுகளிலபெரும் பதவி வகித்தாலும் 
           இக்குடியரசு நாட்டின் நிலைமை கண்டு மனம் கலக்கமுற்றதே 
            எங்கு சட்டம் முடிகிறதோ அங்கேதான் கொடுங்கோல் 
            ஆரம்பம், என்கிறார் ஒரு எமர்சன் எனும் எழுத்தாளன்.
            டாக்டர் அம்பேத்கார்  அரசு சாசனங்களையம், சட்டங்களையும் 
            இயற்றி   மாநிலங்கள ஒரு குடைக்கீழ் கொண்டுவந்து 
            அதன் மூலம்  இந்தியா மாநிலங்கள்  எல்லாம் ஆட்சி   
            உட்பட்டு நடத்தப்படுகிறது 
            
              உலகளவில்  நாம்   இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறோம் 
             வேற்றுமையில்  ஒற்றுமை  என்பதை  காண்கிறோம் 
             இயற்கை  சீற்றம்  அடைந்து   வெள்ளம்  பெருகினாலும் 
              நாடுக்கு  நாடு  உதவிக்கரம்  நீட்டியதே,
             இந்தியன்  என்று  பெருமிதம் கொள்வோமே 
              நாட்டு  நலனில்  அக்கறை கொள்வோமே!
             குடியரசு நாடாய் திகழ்ந்து, பல திட்டங்கள் தீட் டுதே
              நாட்டின் முன் னேற்றதிற்கும் , அக்கறை காட்டுதே 
              ஒற்றுமை எனும் பாலம் மாநிலங்களிடையே வளர்கின்றதே ,
              மொழிகள் பலவாயினும் ஒற்றுமை   ஓங்குதே !

              நாடு  உனக்கு என்ன செய்தது என  கேட்காதிர்கள் 
              நீங்கள் நாட்டிற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள் ,
             நாடு வளம்பெற  ஒற்றுமையுடன்  பாடுபடுவோமே,
             பிற  நாட்டிற்கு  எடுத்துகாட்டா  என்றும் விளங்குவோமே !
             ஜனநாயகத்தின்  குடைகீழ்   வளரும்  நாடு ,
              கலாசாரத்திலும்,  ஆன்மிகத்திலும்,  சிறந்த நாடு ,
           பழமையும், பண்பாடும் மிக்க நாடு .
              பல இன்னல்களை எதிர்கொண்டு வெற்றிபெற்ற நாடு,
              ணையற்ற  சந்ததியுடன் திகழும்  இந்தியா  எனும் நாடு!  


             ரா.பார்த்தசாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக