சனி, 23 ஜூன், 2018

Padakkavithai Potti 166




                                              படைக்கவிதை போட்டி 166


                தன்  மகனுக்கோ, கணவனுக்கோ
                தேநீர்  ஆற்றும்  பெண்மணியே !

                வாய் பொறுக்கும் சூட்டிற்கு குடிக்க ஆற்றுகின்றாய்
                உன் தாகத்தை மறந்து குடும்பத்திற்காக பணிசெய்கின்றாய் !

                கொடுத்திடும்  உன் தாயன்பிற்கு  ஈடு இணையில்லை
                உன் அருமை அறியாத மனிதனும் பெருமையடைவதில்லை !

                இன்முகம் காட்டி, பாசத்தை தேநீரில் கலந்து, மகிழ்ந்து
                கொடுப்பதற்காக எதிர்நோக்கும் குடும்ப பெண்மணியே !

                களைப்புடன் வீடு திரும்புவனுக்கோ இது உற்சாகப் பானம்
                உன் கையால் கொடுப்பது அன்பும், பாசமும் கலந்த உறவாகும் !


                 ரா.பார்த்தசாரதி


              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக