செவ்வாய், 5 ஜூன், 2018

உலக சூற்று சூழல் தினம்




                    உலக  சூற்று  சூழல்  தினம் 


                 நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக  வை           
                 தேவை இல்லாத பிளாஸ்டிக் குப்பைகளை பிரித்து  வை
                 காய்கறி கழிவு களையும் பிரித்து தனியாக வை.
                 வருடம் ஒரு முறை மனித கழிவை வெளியேற்ற வை

                இன்று தண்ணீரும்,  காற்றும் மாசு படுகின்றதே
                இதனால் மக்களின் உடல் நலம் பாதிக்கின்றதே
                கழிவு நீர் கலப்பதால் கடல்வாழ்  இனங்கள் இறக்கின்றதே
                காற்று மாசு பாட்டால் நாட்டின் தலைககரமே  தவிக்கின்றதே  !

                சுற்றுப்புறம் தூய்மையாய்  இருப்பதற்கு உதவுங்கள்
                தனிமனிதா,  தூய்மையை அன்றாடம் கடை பிடியுங்கள்
                வீட்டின் சுத்தமே , நாட்டின் சுத்தம் என  எண்ணுங்கள்
                குழந்தைகள், முதியோர்கள் நலனை கருத்தில்கொள்ளுங்கள் !

                அழகாக வீடு கட்டினால்  மட்டும் போதாது
                அழகாக தோட்டம் அமைத்தால் மட்டும் போதாது
                வீட்டைச் சுற்றி  குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
                மக்களுக்கு  மாசு கட்டுப்பாடின் மாண்பினை எடுத்துரையுங்கள் !

               வானத்தைப்போல் பரந்த மனமும் உயர்ந்த லட்சியம்   கொள்
               கடல் அலைபோல் சுறுசுறுப்பினை கற்றுக்கொள் ,
               கண்ணுக்கு தெரியாத உயிரூட்டும் காற்றுபோல் உதவ கற்றுக்கொள்,
               உலகின்  சுற்றுசுழலையும்     பாதுகாக்க   எண்ணம்கொள் !


                ரா.பார்த்தசாரதி
           


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக