சனி, 23 ஜூன், 2018

மிச்சத்தை மீட்போம்





                                                    

                                                         மிச்சத்தை மீட்போம் 


           பழைய  தலைமுறை பண்புகளை கைக்கொண்டோமா 
           இன்றைய தலைமுறைப் பண்புகளை  மேற்கொண்டோமா 
           தலைமுறைகள்  மாறினாலும் நமது பண்புகள் மாறுவதில்லை 
          தலைமுறைகள் விட்டுசென்றதை மனித மனங்கள் ஏற்பதில்லை !

           வாழ்க்கை என்றும் ஒரு எந்திரியமயமாக கருதப்படுதே 
           நிற்பதற்கும், பேசுவதற்கும் நேரம் இல்லமால் போனதே
           பாவ புண்ணியங்களுக்கு சற்றே பயந்து  நடப்போம்
           வரும்  தலைமுறைக்கு புண்ணியத்தை அளிப்போம் !

          பசுவும், தன் பாலை  மிச்சம் வைத்து தன் குட்டிகளை காப்பாற்றும்
          அதனிடம் கருணை காட்டாது  தன் பசிக்காக அதனை கொல்வோம்
           ஆடு,மாடுகள் உண்ட  மிச்சமே பூமிக்கு சத்துள்ள எருவாகிறது
          மனிதனின் மிச்சமோ மனிதனையே  தீண்டத்தக்கதாக அமைகிறது !

         மனிதன் பல இனங்களானாலும் அவன் குருதி செந்நிறமே
        பணத்தாலும் ,அறிவாலும் மனித இனமும் வேறுபட்டு நிற்குமே
        ஏழை, பணக்கார ஜாதி என்றும்  தலை தூக்கி  நிற்குமே
         பணக்காரர்கள் போட்ட  மிச்சத்தை உண்டுவாழும் ஏழை இனமே !

         ஏழை கடைசி வரை ஏழையாகவே வாழ்ந்து  இறக்கின்றான்
         தன் ஏழ்மையை  என்றும் தானமாக விட்டு செல்கின்றான்
         பணக்காரகளின் செல்வம் அவன்  தலைமுறைக்கேச்  சேருகிறது
         மடுவிற்கும், மலைக்கும் உள்ள இடைவெளியே உதாரணமாகிறது !
       
         ஒருவன் நல்ல நிலையில் இருந்தால், முன்னோர் செய்த புண்ணியமா
         ஏழையாய்  இருப்பதும் முன்னோர் செய்த தீமையான காரியமா
         வள்ளுவன் சொன்ன எச்சத்தாரால் மிச்சத்தை மீட்க முடியுமா
         விட்டுச் சென்றதை நடுநிலைமை கொண்டுதான் தீர்க்கமுடியுமா !
       
         
         
         ரா.பார்த்தசாரதி 
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக