வியாழன், 14 ஜூன், 2018

டி .ஜே ஸ்ரீதரன் கௌரவ டாக்டர் பட்டமளிப்பு விழா





                                              

டி .ஜே  ஸ்ரீதரன் கௌரவ டாக்டர் பட்டமளிப்பு விழா 
Awarded by Indian Virtual Academy for peace and Education

கவிபரணி ஏறி, கலிங்கத்து பரணி கூறுகிறேன்
கேளுங்கள், கேளுங்கள் 

மூன்றெழுத்திற்கு  ஓர் சிறப்புண்டு 
முத்தமிழ் எனும் பெயருண்டு 

தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பரிவே அன்பு.
                       தந்தை தன் மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு
               குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி
                                     வாசமுள்ள  மலர்களின் சிரிப்பே மணம்
                             கள்ளமில்லா குழந்தையின் சிரிப்பே மழலை 
                     மனிதன் இறைவனிடம் கொண்ட அன்பே பக்தி
கவிஞன் கவிதையை பாங்குற எடுத்துரைப்பதே கவிஞனின் யுக்தி
                  மனிதன் நல்லதை செய்ய தேவை ஒரு நல்ல மனம்
நாடு நலம் பெற வேண்டுமெனின் நாடவேண்டும் நல்லவர் நட்பு.
   நல்வழிக்கும் , அமைதிக்கும், மக்கள் சேவையில் ஈடுபடும்  
                                                நம் தலைவர்  காண்பதோ  வெற்றி
    ஆம் நம் விஷ்ணுசஹஸ்ரநாம  மண்டலியின்  தளபதி 
கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற  மூன்றெழுத்து   ஸ்ரீதர்
ஆம், ஸ்ரீதர் என்ற பெயரும் மூன்றெழுத்து 
================================ரா.பார்த்தசாரதி 
ஜே .பி .என் விஷ்ணுசஹஸ்ரநாம மண்டலி  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக