வெள்ளி, 2 டிசம்பர், 2016

Thoole and Kuzhnthaiyum




                               துயிலெனும் தூக்கம் –
இறைவன் நமக்களித்த இலவச பரிசு– தூக்கம்
இமைகள் மூடி நமக்குள் நாமே தொலைய கிட்டும் சுகம்
துயிலின் முடிவு விழிப்பா இல்லை
விழிப்பின் முடிவு துயிலா -இது
இயற்கை நமக்கு விடும் விடுகதை.
இரண்டும் இருளும் ஒளியுமாய் ஓயாமல்
நம்மைச் சுற்றி உலா வரும் உண்மை
துயில்லில்லா வாழ்வு துயரமே அது போல்
விழிப்பில்லா வாழ்வும் அதி துயரமே
அள்வோடு கொள்ளும் துயிலும் விழிப்பும் கொள்ள‌
வாழ்வும் வளமாகும் என் நாளுமே
பொய்த் தூக்கம், பெருந்தூக்கம், அரைத்தூக்கம்
ஆழ் நிலைத்தூக்கம் பகல் தூக்கமென பல வகை உண்டு
தூங்காது தூங்கி இருக்கும் நிலையோ
மெய்யடியார்கள் கண்ட கலை..
மானிடர் கொள்வது அறியா துயில் ஆனால்
மாதவன் கொண்டது ஆலிலையில் அறிதுயில்
ஆழ்துயிலில் துளிர் விட்ட அரிய் சிந்தனைகளே
அறிஞர்கள் கண்ட அரும் பெரும் கண்டு பிடிப்புகள்
அறியா பருவம் வரை வந்த ஆழ்ந்த தூக்கம்
பருவம் வர வர பறப்பது ஏனோ
இனி வரம் ஒன்று கேட்கிறேன் இறைவா!
வரும் நாட்களில் குழந்தையைப் போல் தூங்கவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக