புதன், 30 நவம்பர், 2016

எங்கள் ரோடோ




                                             எங்கள் ரோடோ 
 
உலகில் நன்றியுள்ள பிராணி நாய் என்று சொல்வதுண்டு
உலகில் நன்றிகெட்டவன் என்று மனிதனை சொல்வதுண்டு
நாயை செல்லமாக வளர்ப்பவர்கள்  எல்லையை மீறக்கூடாது!
அதனைஅதிகம் தூக்கி வைத்து கொண்டாடவும் கூடாது!
நாயும் எஜமானன் போடும் உணவிற்காக நன்றியினை காட்டும்
சிலசமயம் அடித்து துரத்தினாலும் அவனிடமே வந்து சேரும்
கடலில் அவன் வீசிய பொருளை நீந்தி சென்று எடுத்து வரும்
கடலில் குளித்தாலும் தோளையும் தாவி பிடித்து உறவாடும்!
வீட்டில் திருடர்கள் வந்தால் குரைத்து மனிதனை எழுப்பும்
எஜமானன் தொலைவில் இருந்தாலும் அவன் வரவை உணர்த்தும்
தன் எஜமானுக்காக உயிரையும் கொடுத்து செய்நன்றி காட்டும்
யாருமில்லாத தனிமனிதனுக்கு நண்பனாய் துணையிருக்கும்!
பொய்யும்,புரட்டும் பேசுபவர்களிடம் ஜாக்கிரதையாக பேசுவோம்
நாய் ஜாக்கிரதை என்ற பலகையை வீட்டு வாசலில் மாட்டுவோம்
உலகில் நாய் வளர்ப்பதே ஓர் நாகரிக பொழுது போக்காகும்
என்றைக்கும் நன்றியுடனே எங்கள் ரோடோ வீட்டையும் காக்கும்!

ரா.பார்த்தசாரதி
--------------------------------------------------------------------------------------------------------------------- 






                                             எனது நண்பன் 

தோழமைக்கு இனமேது குலமேது
ஐந்தறிவு ஆறறிவு பேதமெல்லாம்
அன்புக்கு முன் நில்லாது
உருவத்தில் இல்லை உயர்வு தாழ்வு
உயர்ந்த உள்ளத்தில் தான் உள்ளது
அன்பு செய்யும் அஃறிணை கூட  உயர்திணையே!
அன்பில்லாத உயர்திணையும் அஃறிணையே!
குறும்பு செய்யும் மழலையாக,தோழனாக,தோழியாக
ஒவ்வொரு வீட்டிலும் காவலனாக…
பன்முக உறவினைப் பரிமாறும் பற்றாளன்
கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் செல்லப்பிராணியிடம்
தோளில் வளர்ந்த பிள்ளைகள் கூட
தூர நிற்பர் ஒருகாலத்தில்
காலில் விழும் செல்லப்பிராணியோ
தாவி அணைக்கும்  தவணையின்றி
அதனை உணர்ந்த மானிடர்கள்
தோளில் இடம் தந்துள்ளனர் போலும்
தோளோடு தோளாகத் தோழமை செய்ய
உன்னத அன்பே போதும். 
------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக